search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்ணாடியை உடைத்து திருட முயற்சி"

    போளூரில் இன்று காலை வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடியை உடைத்து திருட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பஸ் நிலையம் அருகே உள்ள பஜார் சிந்தாதிரிப்பேட்டை தெருவில் வங்கி ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டிஎம். வழியாக தான் நகை கடை, ஜவுளி கடைகளுக்கு செல்ல வேண்டும். இதனால் இந்த பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் காணப்படும்.

    இந்த நிலையில் இன்று காலை வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து ஏ.டி.எம். எந்திரத்தினை உடைக்க முயன்றார். அதற்குள் ஆட்கள் நடமாட்டம் காணப்பட்டதால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    ஏ.டி.எம். மையத்தில் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டதை கண்ட பொதுமக்கள் போளூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் ஏ.டி.எம். கண்ணாடியை உடைத்து வாலிபர் யார்? எதற்காக ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடியை உடைத்தார். திருடும் நோக்கில் வந்தாரா? அல்லது குடிபோதையில் உடைத்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை சோதனை செய்து வருகின்றனர். இந்த ஏ.டி.எம் மையத்திற்கு காவலாளி கிடையாது.

    ×