search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுமானப்"

    • வாழப்பாடி பேரூராட்சியில், ரூ.8.70 கோடி மதிப்பீட்டில் நவீன ஈரடுக்கு நவீன பஸ் நிலையம் அமைக்கும் பணி ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
    • சேலம் மண்டல பேருராட்சி உதவி இயக்குநர் கணேஷ்ராம் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியில், ரூ.8.70 கோடி மதிப்பீட்டில் நவீன ஈரடுக்கு நவீன பஸ் நிலையம் அமைக்கும் பணி ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

    இதேபோல் ச.வாழப்பாடி மயானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இத்திட்டப் பணிகளை, சேலம் மண்டல பேருராட்சி உதவி இயக்குநர் கணேஷ்ராம் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இரு பணிகளையும் விரைந்து முடித்து, மக்கள் பயன் பட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டுமென ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது, வாழப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், உதவி பொறியாளர் தினேஷ்குமார், பேரூராட்சி தலைவர் கவிதா சக்கர வர்த்தி, துணைத்தலைவர் எம்.ஜி.ஆர். பழனிசாமி மற்றும் பேரூராட்சி உறுப்பி னர்கள் உடனிருந்தனர்.

    ×