search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடும் வெள்ளம்"

    • அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் தரை தளத்தில் வசித்து வருபவர்கள் மேல் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
    • 190 குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    டஸ்கனி:

    இத்தாலி டஸ்கனி நகரில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை கொட்டியது. இரவு முழுவதும் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கன மழையால் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    சில இடங்களில் ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகள் முன் நிறுத்தி வைத்து இருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் தரை தளத்தில் வசித்து வருபவர்கள் மேல் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    இதில் வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலியாகி விட்டனர். 2 பேரை காணவில்லை. இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சாலைகளிலும் வெள்ளம் ஆறு போல ஓடுகிறது.

    இத்தாலியில் வரலாற்று நகரமான புளோரன்ஸ் அருகே உள்ள கேம்பி பிசென்சியோவில் 190 குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தற்போது அங்கு நிலைமை மோசமாக உள்ளதால் அவசரகால நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இத்தாலியில் கடந்த 100 ஆண்டுகளில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாள் இரவில் பலத்த மழை கொட்டி தீர்த்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை
    • சாத்தனூர், குப்பநத்தம் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு கன மழை கொட்டி தீர்த்ததால், தாழ்வானப் பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது.

    ஜவ்வாதுமலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் குப்பநத்தம், செண்பகத் தோப்பு மற்றும் மிருகண்டா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    குப்பநத்தம் அணைக்கு நேற்று முன் தினம் நள்ளிரவு நீர்வரத்து திடீரென அதிகரித்ததால், அணை யில் இருந்து உபரி நீர் வெளி யேற்றப்பட்டது.

    அதிகாலை 2 மணிஅளவில் விநாடிக்கு வந்த 1,500 கனஅடி தண்ணீரும், செய்யாற்றில் வெளியேற்றப்பட்டன. இதனால், செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    சாத்தனூர் அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 116.25 அடியாக உள்ளது. அணைக்கு 5,150 கனஅடி தண்ணீர் வருகிறது.

    வரும் தண்ணீர் அப்படியே தென் பெண்ணையாற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளது.

    தென்பெண்ணையாறு மற்றும் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என நீர்வளத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர் மட்டம் 16.40 அடியாக உள்ளது. அணையில் 52.726 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

    அணையில் இருந்து விநாடிக்கு 66 கனஅடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

    62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 47.23 அடியாக உள்ளன.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 697 ஏரிகளில் 157 ஏரிகள் நேற்று முன்தினம் முழுமையாக நிரம்பின.

    நேற்று ஒரே நாளில் மேலும் 17 ஏரிகள் நிரம்பியுள்ளன. மொத்தம் 174 ஏரிகள், 100 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளது.

    ×