search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலைமாவு"

    • முட்டையே இல்லாமல் வெஜ் ஆம்லெட்.
    • அசைவம் சாப்பிடாத நிலையில் சைவ ஆம்லெட் செய்து சாப்பிடலாம்.

    முட்டையில் ஆம்லெட் செய்தால் சாம்பார் சாதம், ரசம் சாதம் அனைத்திற்கும் நல்ல சைட்டிஷ் ஆக இருக்கும். ஆனாலும் சிலருக்கு முட்டை பிடிக்காது. எனவே முட்டை பிடிக்காதவர்கள் முட்டையே இல்லாமல் வெஜ் ஆம்லெட் செய்து சாப்பிடலாம். மேலும் புரட்டாசி மாதம் வந்துவிட்டது. எனவே விரதம் இருப்பவர்கள் அசைவம் சாப்பிடக்கூடாத நிலையில் இந்த சைவ ஆம்லெட் செய்து சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    கடலை மாவு- 1கப்

    வெங்காயம்- 2 (நறுக்கியது)

    தக்காளி- 1 (நறுக்கியது)

    பச்சைமிளகாய்-2 (நறுக்கியது)

    கொத்தமல்லி இலை- சிறிதளவு

    கறிவேப்பிலை- சிறிதளவு

    மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை

    சிவப்பு மிளகாய்தூள்- 1/4 ஸ்பூன்

    கரம் மசாலா- 1/4 ஸ்பூன்

    எண்ணெய்- தேவையான அளவு

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டுக்கொள்ளவும். பின்னர் அதில் கடலை மாவு, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா தூள், எண்ணெய், உப்பு, சேர்த்து அதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையினை 1௦ நிமிடத்திற்கு அப்படியே வைக்க வேண்டும்.

    அதன்பிறகு ஒரு தோசை தவாவில் சிறிது எண்ணெய் தடவி கலவையை ஊற்றி சமமாக பரப்பவும். இருபுறமும் முழுமையாக 5 நிமிடம் வேக விட்டு எடுக்க வேண்டும். இந்த வெஜ் ஆம்லெட் சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சூடாக பரிமாறவும்.

    • அரிசி மாவு, பச்சை மிளகாய் விழுது கலந்து கிளறினால் வடகம் சுலபமாக பிழியலாம்.
    • வெண்ணெய், பால் கலந்து அரிசி மாவை கிளறினால் கொழுக்கட்டை உடைந்து வராது.

    பொதுவாகவே சமைக்கும் அனைவருக்கும் பிடித்த மாதிரி சமைக்க வேண்டும் என்பது தான் இல்லத்தரசிகளின் பெரிய ஆசை. இதற்காக புதிய புதிய வகைகளில் சமையல்களை செய்வார்கள் அப்படி சமையலில் அசத்த சில சூப்பரான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

    * கடலை மாவை சூடான நெய்யில் கரைத்து, பின்பு சர்க்கரை பாகில் கலந்து மைசூர் பாகு செய்தால், அது மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். மைசூர் பாகு செய்யும்போது நெய்யும் அதிகம் ஊற்றி கிளற வேண்டியது இருக்காது.

    * பாசி பருப்பை வேகவைத்து அதில் அரிசி மாவு கலந்து தேன் குழல் செய்தால் சுவையாக இருக்கும்.

    * காய்கறிகள் வேக வைத்த தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். அதனை பயன்படுத்தி அவியல் செய்தால் காய்கறிகள் கறுப்பு நிறமாக மாறாது. பொரியலும் பளிச்சென்றும், ருசியாகவும் இருக்கும். (தண்ணீர் கொஞ்சமாக ஊற்றி வேக வைக்கவும்)

    * கேசரிக்கு நெய் ஊற்றி ரவையை வறுக்கும்போது அதில் சிறிதளவு சுடுதண்ணீர் ஊற்றவும். அதனுடன் கேசரி பொடியை சேர்த்தால் துளி கூட கட்டி பிடிக்காது.

    * ஜவ்வரிசியை வேகவைத்து அந்த தண்ணீரில் உப்பு, அரிசி மாவு, பச்சை மிளகாய் விழுது கலந்து கிளறினால் வடாகம் சுலபமாக பிழியலாம்.

    * அடைக்கு தேவையான பருப்பு, மிளகாயை மிக்சியில் அரைத்து வைத்துக்கொண்டால் உடனடியாக உப்பு கலந்து அடை செய்யலாம்.

    * கொழுக்கட்டைக்கு தண்ணீர் கொதிக்கும்போது, ஒரு ஸ்பூன் வெண்ணெய், ஒரு ஸ்பூன் பால் கலந்து பின்பு அரிசி மாவை போட்டு கிளறினால் கொழுக்கட்டை உடைந்து வராமல் இருக்கும்.

    ×