search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓம் பிரகாஷ் சவுதாலா"

    ஓம்பிரகாஷ் சவுதாலா தனது 87 வயதில் 10-ம் வகுப்பு பரீட்சை எழுதி பாஸ் செய்துள்ளார்.
    சண்டிகர்:

    கடந்த 1993 முதல் 2006-ம் ஆண்டு வரை முறைகேடாக ரூ.6.09 கோடி சொத்து சேர்த்ததாக அரியானா முன்னாள் முதல் மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலா மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.

    இந்த வழக்கில் சவுதாலாவுக்கு எதிராக கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஓம் பிரகாஷ் சவுதாலா குற்றவாளி என கடந்த வாரம் தீர்ப்பு அளித்தது. அவருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில், தண்டனைஅளிப்பது குறித்த வாதம் முடிந்த நிலையில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், ஓம் பிரகாஷ் சவுதலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டது. ரூ. 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அரியானா முன்னாள் முதல் மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு சொந்தமான வீடு, நிலம் உள்ளிட்ட 3.68 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டன. #EDAttaches #OmPrakashChautala
    புதுடெல்லி:

    இந்திய லோக்தளம் கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் சவுதாலா முன்னர் அரியானா மாநில முதல் மந்திரியாக  பதவி வகித்தபோது லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்களை நியமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பான வழக்கில் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விசாரணை கோர்ட்டு கடந்த 2013-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த ஊழல் வழக்கில் அவர் டெல்லி திகார் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அவர் மீது பொருளாதார அமலாக்கத்துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு சொந்தமான டெல்லி பஞ்சகுலா மற்றும் அரியானா மாநிலத்தில் உள்ள வீடு, நிலம் உள்ளிட்ட 3.68 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை இன்று தெரிவித்துள்ளது. #EDAttaches #OmPrakashChautala
    வாரிசு சண்டையால் அதிருப்தி அடைந்த ஓம் பிரகாஷ் சவுதாலா சிறையில் இருந்தவாறே அஜய் சிங் சவுதாலாவையும் கட்சியில் இருந்து நீக்கி நேற்று உத்தரவிட்டார். #OmPrakashChautala #AjaySinghChautala
    சண்டிகார்:

    இந்திய தேசிய லோக்தளம் கட்சி தலைவரும், அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான ஓம் பிரகாஷ் சவுதாலா ஆட்சியில் இருந்த போது ஆசிரியர் பணி நியமன மோசடி வழக்கில் சிறை தண்டனை பெற்றார். அவருடைய மூத்த மகன் அஜய் சிங் சவுதாலாவும் இந்த வழக்கில் சிக்கினார். இருவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதையடுத்து ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இளைய மகன் அபே சவுதாலா எதிர்க்கட்சி தலைவராக இருந்து கட்சியை நிர்வகித்து வருகிறார். ஆனால் அவருடைய தலைமையை எதிர்த்து அஜய் சிங் சவுதாலாவின் மகன்களான துஷ்யந்த் சவுதாலா எம்.பி., திக்விஜய் சவுதாலா ஆகியோர் போர்க்கொடி உயர்த்தினர். இதனால் ஓம் பிரகாஷ் சவுதாலா சிறையில் இருந்தபடியே அஜய் சிங் சவுதாலாவின் 2 மகன்களையும் கட்சியில் இருந்து 2-ந்தேதி நீக்கினார்.



    இந்நிலையில் சிறையில் இருந்து பரோலில் வந்த அஜய் சிங் சவுதாலா, தன் மகன்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். மேலும் 17-ந் தேதி இந்திய தேசிய லோக்தளம் கட்சி அறிவித்துள்ள செயற்குழு கூட்டத்துக்கு எதிராக போட்டி கூட்டத்துக்கு அஜய் சிங் சவுதாலா அழைப்பு விடுத்தார். வாரிசு சண்டையால் அதிருப்தி அடைந்த ஓம் பிரகாஷ் சவுதாலா சிறையில் இருந்தவாறே அஜய் சிங் சவுதாலாவையும் கட்சியில் இருந்து நீக்கி நேற்று உத்தரவிட்டார். 
    ×