search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஓம்பிரகாஷ் சவுதாலா
    X
    ஓம்பிரகாஷ் சவுதாலா

    சொத்துக் குவிப்பு வழக்கு - அரியானா முன்னாள் முதல் மந்திரிக்கு 4 ஆண்டு சிறை

    ஓம்பிரகாஷ் சவுதாலா தனது 87 வயதில் 10-ம் வகுப்பு பரீட்சை எழுதி பாஸ் செய்துள்ளார்.
    சண்டிகர்:

    கடந்த 1993 முதல் 2006-ம் ஆண்டு வரை முறைகேடாக ரூ.6.09 கோடி சொத்து சேர்த்ததாக அரியானா முன்னாள் முதல் மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலா மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.

    இந்த வழக்கில் சவுதாலாவுக்கு எதிராக கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஓம் பிரகாஷ் சவுதாலா குற்றவாளி என கடந்த வாரம் தீர்ப்பு அளித்தது. அவருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில், தண்டனைஅளிப்பது குறித்த வாதம் முடிந்த நிலையில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், ஓம் பிரகாஷ் சவுதலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டது. ரூ. 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    Next Story
    ×