என் மலர்
நீங்கள் தேடியது "ஐஏஎஸ் அகாடமி"
- புதிய ஆன்லைன் வகுப்புகள் பிப்ரவரி 8-ந் தேதி தொடங்குகிறது
- வகுப்புகள் தினசரி மாலை 6.30 முதல் 8.30 மணி வரை நடைபெறும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆன்லைன் வழியாக படித்தவர்கள், மாதிரித் தேர்வு எழுதியவர்கள் என மொத்தம் 2,106 பேர்களை தேர்ச்சி பெறச் செய்து ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி தமிழக அளவில் அசாத்திய சாதனையைப் படைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் 2026ம் ஆண்டுக்கான புதிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 8-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமின் இயக்குநர் ச.வீரபாபு கூறியதாவது:-
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி, கடந்த 19 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வருகிறது. இந்த அகாடமியில் படித்து, இதுவரையில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாடு அரசின் பல்வேறு பணிகளில் முக்கிய பதவி வகித்து வருகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஆன்லைன் வழியாக படித்தவர்கள், மாதிரி வினாத்தாள்கள் பெற்று பயிற்சி செய்தவர்கள், மாதிரித் தேர்வு எழுதியவர்கள் என மொத்தம் 2,106 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல, கடந்த மாதம் வெளியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்விலும் 500க்கும் மேற்பட்டோர் இந்த அகாடமியில் படித்தவர்கள் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ஆன்லைன் வகுப்புகள்
இந்நிலையில், 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான புதிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 8-ந்தேதி தொடங்குகிறது. இந்த வகுப்புகள் தினசரி மாலை 6.30 முதல் 8.30 மணி வரை நடைபெறும். அதற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
முன்பதிவு செய்க
இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர, 'TNTET ONLINE COACHING-2026' என்று டைப் செய்து, தங்களது முழு முகவரியை 7550151584-என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு: 7550151584, 7550151589, 7550053400 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் ச.வீரபாபு தெரிவித்துள்ளார்.
- மாதிரி வினாத்தாள்களை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ளது.
- இந்த மாதிரி வினாத்தாள்களை வாட்ஸ்அப் வழியாக இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள 1,996 பணியிடங்களுக்கான முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு அனைத்துப் பாடங்களுக்கும், புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்களை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ளது.
சென்னையில் இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி, கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய - மாநில அரசுகள் நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பான முறையில் பயிற்சியளித்து வரும் முன்னணி பயிற்சி நிறுவனம் ஆகும்.
இந்த அகாடமியில் படித்தவர்கள் தமிழகம் முழுவதும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அரசின் பல்வேறு முக்கிய பணிகளில் பதவி வகித்து வருகின்றனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தின்படி, அனைத்துப் பாடங்களுக்கும் மாதிரி வினாத்தாள்களை ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதும் அனைவரும் முன்பதிவு செய்து, இந்த மாதிரி வினாத்தாள்களை வாட்ஸ்அப் வழியாக இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
இந்த மாதிரி வினாத்தாள்களைப் பெற முன்பதிவுக்கு 'PG -TRB MODEL QUESTION PAPER-2025' என்று டைப் செய்து தங்களது 'SUBJECT' மற்றும் முகவரியுடன் 9176055568 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, 9176055576, 9176055578 என்கிற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரில் உள்ள கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் புதிய பயிற்சி வளாகம் திறப்பு விழா மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. அகாடமியின் கவுரவ ஆலோசகர் எம்.பூமிநாதன் முன்னிலை வகித்தார்.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து காணொலி காட்சி மூலம் அகாடமியின் புதிய பயிற்சி வளாகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அகாடமியில் பயின்று சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற 20 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:-
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முன்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பிள்ளைகள் தான் வெற்றி பெற முடியும். ஆனால் தற்போது அந்த காலம் மாறிவிட்டது. இப்போது சாதாரண குடும்பத்தில் உள்ளவர்களும் வெற்றி பெறுகின்றனர்.
கிங் மேக்கர்ஸ் அகாடமி கிராமப்புற மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து தேர்வுக்கு தயார்படுத்துவது பாராட்டுக்குரியது.
நாட்டின் வளர்ச்சியில் சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் பங்கு முக்கியமானது. நீதி, நேர்மையை நிலைநாட்டுவதற்கு பல திட்டங்களை அதிகாரிகள் கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசுகையில், தெளிவான லட்சியம், சரியான தேர்வு, கடின உழைப்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி வெற்றி பெற முடியும்.
முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனை தரும் என்பதற்கு இலக்கணமாக வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
முன்னதாக அகாடமியின் நிர்வாக இயக்குனர் சத்யஸ்ரீ பூமிநாதன் வரவேற்றார். முடிவில் அகாடமி இயக்குனர் வெங்கடேஷ் நாராயணன் நன்றி கூறினார்.






