search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு"

    • காரைக்காலில் 17 ஏ.டி.எம் மெஷி ன்களில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்து வருகிறார்.
    • ஞானசேகரன் காரைக்கால் நகர டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் பச்சூர் சவுதா நகரில் வசித்து வருபவர் ஞான சேகரன்(வயது64).இவர் காரைக்கால் பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தொடர்ந்து, அதே வங்கியில் ஏ.டி.எம் மெஷின்களுக்கு சேனல் மேலாளராக இருந்தது. காரைக்காலில் 17 ஏ.டி.எம் மெஷின்களில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்து வருகிறார். இந்நிலையில், காரை க்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்-ல் மர்ம நபர் ஒருவர் கையில் இரும்பு ஆயுதம் கொண்டு உடைத்து பணம் திருட முயன்றுள்ளார். பல முறை முயற்சித்தும் ஏ.டி.எம் மெஷினை உடைக்க முடியாததால் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    வங்கி ஏ.டி.எம் மெஷினை உடைக்க முயன்றதும் ஞானசே கரனின் மொபைலுக்கு ஏ.டி.எம் மெஷின்களின் கண்காணிப்பு காமிரா காட்சிகள் வந்தது. அதன் அடிப்படையில் ஹைதராபாத் தலைமையகத்துக்கு ஞானசேகர் தகவல் அளித்தார். அதனை தொடர்ந்துஞானசேகரன் ஏ.டி.எம் க்கு சென்று பார்த்த பொழுது, எந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து ஞானசேகரன் காரைக்கால் நகர டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரத்தை ஆயுதம் கொண்டு உடைக்க முயன்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    ×