search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எழுத்து தேர்வை"

    • ஈரோடு மாவட்டத்தில் நாளை நடக்கும் சப்- இ ன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வுக்காக 2 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • நுழைவு சீட்டும் அவர்கள் விண்ணப்பித்த இணைய தளம் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழ்நாடு சீருடை ப ணியாளர் தேர்வாணையத்தி ன் மூலம் உதவி ஆய்வாளர் (எஸ்ஐ) மற்றும் ஸ்டேஷன் அதிகாரி ஆகிய காலிப்ப ணியிடத்திற்கான எழுத்து தேர்வு மாநிலம் முழுவதும் நாளை (26-ந் தேதி), நாளைய மறுதினம் (27-ந் தேதி) ஆகிய 2 நாட்கள் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவு சீட்டும் அவர்கள் விண்ணப்பித்த இணைய தளம் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் நாளை நடக்கும் சப்- இ ன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வுக்காக ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கலை கல்லூரி, வேளாளர் என்ஜினீ யரிங் கல்லூரி ஆகிய 2 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தேர்வினை 3,567 பேர் எழுத உள்ளனர்.

    தேர்வானது, காலை 10 மணி க்கு தொடங்கி பகல் 12.30 மணி வரை பொது அறிவு தேர்வும், மதியம் 3.30 மணி முதல் 5.10 மணி வரை மொழி திறனறி தேர்வும் நடக்கிறது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

    ஈரோட்டில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு நடக்கும் 2 மையங்களில் 300 போலீசாரும், தேர்வு மையத்துக்கு வெளியே 100 போலீசார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். தேர்வர்கள் காலை 8 மணி முதல் தேர்வு மையத்துக்குள் வர அனுமதிக்கப்படுவர்.

    பிரஸ்கிங் முறையில் சோதனை செய்யப்பட்ட பின் தேர்வர்கள் தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

    செல்போன், பேக், பர்ஸ், கால்குலேட்டர், புளு டூத், டிஜிட்டல் மற்றும் எல க்ட்ரா னிக் வாட்ச் போன்ற எவ்வித எலக்ட்ரானிக் பொருட்கள், விலை உயர்ந்த பொரு ட்கள் தேர்வு மையத்திற்குள் எடுத்து வர அனுமதி இல்லை.

    தேர்வு மையத்தின் முன்புறம் உள்ள பாதுகாப்பு அறையில் தாங்கள் எடுத்து வரும் பொருட்களை வைத்து விட்டு, எழுது பொருள் மற்றும் நுழைவு சீட்டினை மட்டும் தேர்வு மையத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×