search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயரிங் மாணவன்"

    திருப்பதி அடுத்த ரேணிகுண்டாவில் காதல் தகராறில் என்ஜீனியரிங் மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பதி:

    திருப்பதி அடுத்த ரேணிகுண்டா கெங்கி ரெட்டி பள்ளியை சேர்ந்தவர் ஜானகிராம் (வயது 19). இவர் திருப்பதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். 2-வது ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் காஜீலு மாண்டியம் பகுதியை சேர்ந்த வம்சிராயல் (20) என்பவர் படித்து வந்தார்.

    இவர்கள் 2 பேரும் அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளனர். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் நண்பர்கள் கிரிக்கெட் விளையாட அழைப்பதாக தன் தாயிடம் கூறிவிட்டு ஜானகிராம் சென்றார். காஜீலு மாண்டியம் விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் ஜானகிராம் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்.

    அங்கு வம்சிராயல் தனது நண்பர்கள் 7 பேருடன் குடி போதையில் வந்து ஜானகி ராமிடம் தகராறு செய்தார். அப்போது வம்சிராயல் மற்றும் அவரது நண்பர்கள் மறைந்து வைத்திருந்த கத்தியால் ஜானகிராமை பயங்கரமாக குத்தினர். இதில் படுகாயம் அடைந்த ஜானகிராம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். #tamilnews
    ×