என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எண்ணூரில் ரவுடி வெட்டி கொலை"
திருவொற்றியூர்:
எண்ணூர், ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் பிரபு என்கிற கிளிபிரபு (வயது 36), ரவுடி. இவர் மீது திருவொற்றியூர், எண்ணூர் போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற பிரபு திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஜெ.ஜெ.நகர் ரெயில்வே தண்டவாளம் அருகே பலத்த வெட்டுக் காயத்துடன் பிரபு உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரது உடல் முழுவதும் அரிவாள் வெட்டு இருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் எண்ணூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பிரபுவை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பல னின்றி நள்ளிரவில் பிரபு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரபு கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார் என்று உடனடியாக தெரியவில்லை. அவரை வேறு எங்காவது கடத்தி சென்று வெட்டி இங்கு வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதையடுத்து பிரபு கடைசியாக யாருடன் சென்றார்? அவருக்கு வேறு யாருடனும் மோதல் உள்ளதா? அவரது செல்போனுக்கு பேசியவர்கள் யார்-யார்? என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள்.
கொலையுண்ட பிரபுவுக்கு வசந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் எண்ணூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்