search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர் மரணம்"

    • சென்னை கத்திவாக்கத்தை சேர்ந்த தர்மலிங்கம் வழக்கம்போல் நேற்று பணிக்கு வந்துள்ளார்.
    • தர்மலிங்கம் மீது உணவு இடைவேளையின்போது கிரேன் மோதியதாக கூறப்படுகிறது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த பாத்தபாளையம் கிராமத்தில் கட்டுமான பொருட்களுக்கு தேவையான இரும்பு ராடு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சென்னை கத்திவாக்கத்தை சேர்ந்த தர்மலிங்கம் வழக்கம்போல் நேற்று பணிக்கு வந்துள்ளார். தர்மலிங்கம் மீது உணவு இடைவேளையின்போது கிரேன் மோதியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தர்மலிங்கம் சாவில் மர்மம் இருப்பதாக தொழிலாளர்கள் கூறினார்கள். எனவே அவரது சாவில் மர்மம் இருக்கிறதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×