search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக சுற்றுலா தின விழா"

    • 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
    • மாமல்லபுரம் அபிராமி யோகாலயாவினர் இவர்களை ஒருங்கிணைத்து இந்த பழங்குடி விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின விழா கொண்டாடபட்டது. விழாவில் பரதநாட்டியம், கரகாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், பொய்கால்குதிரை என பாரம்பரிய நடனங்கள் நடத்தப்பட்டது. விழாவில் செங்கல்பட்டு சப்-கலெக்டர் லட்சுமிபதி, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், சிற்பக்கல்லூரி முதல்வர் ராமன், சுர்தீப் ரங்கசாமி, வழிகாட்டிகள் உட்பட 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

    முன்னதாக திருக்கழுகுன்றம், கடம்பாடி, தண்டரை, மானாமதி சுற்றுவட்டார பகுதி இருளர் பழங்குடி பெண்கள் தங்கள் வீட்டில் இருந்து உற்பத்தி செய்யும் கை எம்ராய்டரி துணிகளை, அர்ச்சுனன்தபசு அருகே ஸ்டால் அமைத்து காட்சி படுத்தி இருந்தனர். மயில், பழங்குடி வேட்டை, மாம்பழம், மயில், கோலம் உள்ளிட்ட டிசைன்கள் அங்கு வந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. மாமல்லபுரம் அபிராமி யோகாலயாவினர் இவர்களை ஒருங்கிணைத்து இந்த பழங்குடி விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

    • கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பு
    • நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார்.

    கன்னியாகுமரி :

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 27-ந் தேதி உலக சுற்றுலா தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல இந்த ஆண்டு சுற்றுலா மற்றும் பசுமை முதலீடு என்ற தலைப்பில் இன்று நாடு முழுவதும் உலக சுற்றுலா தின விழா கொண்டா டப்பட்டது.

    குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் குமரி மாவட்ட சுற்றுலாத்துறை இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா தின விழாவை கன்னியாகுமரி யில் இன்று கொண்டாடியது. இதையொட்டி இன்று காலை கன்னியாகுமரியில் மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது. கன்னியாகுமரி நான்கு வழி சாலை முடியும் ஜீரோ பாயிண்ட் பகுதியில் இருந்து காலை 7 மணிக்கு தொடங்கிய மினி மாரத்தான் ஓட்டத்தை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார்.

    அகஸ்தீஸ்வரம் விவே கானந்தா கல்லூரி, விவேகானந்தா பாலி டெக்னிக் கல்லூரி, பால்குளம் ரோகிணி பொறி யியல் கல்லூரி உள்ளிட்ட 5 கல்லூரிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். கன்னியா குமரி சீரோ பாயிண்ட் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த மினி மாரத்தான் ஓட்டம் மகாதானபுரம் 4 வழி சாலை ரவுண்டானா சந்திப்பு வரை சென்று திரும்பி மீண்டும் அதே வழியாக சீரோ பாயிண்ட் பகுதியை சென்ற டைந்தது. மொத்தம் 6 கிலோ மீட்டர் தூரம் இந்த மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது.

    தொடக்க விழா நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன், குமரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பி ரண்டு மதியழகன், கன்னியா குமரி துணை சூப்பிரண்டு மகேஷ்குமார், குமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார், உதவி அலுவலர் கீதா ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதன் பின்னர் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் தூய்மை பணி நடந்தது. மேயர் மகேஷ் தலைமையில் கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவி கள் கலந்து கொண்டு கடற்கரையை சுத்தம் செய்தனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக படகுத்துறையில் வைத்து சுற்றுலாத் துறை சார்பில் தமிழக கலாச்சார முறைப்படி நெற்றியில் சந்தனம் குங்குமம் திலகமிட்டு சங்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு இனிப்புடன் சுற்றுலா கையேடும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    இது தவிர பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு இடையே சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின விழாவை யொட்டி பேச்சு மற்றும் கட்டுரை போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி மாணவர்களின் பேரணியும் நடந்தது. ஓட்டல் மற்றும் லாட்ஜூகளில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி சதீஷ்குமார் உதவி அலுவலர் கீதா ராணி ஆகியோர் செய்து இருந்த னர்.

    • 27-ந்தேதி கொண்டாடப்படுகிறது
    • ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி மாணவர்களின் பேரணியும் நடக்கிறது

    கன்னியாகுமரி :

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நாடு முழுவதும் உலக சுற்றுலா தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. குமரி மாவட்ட சுற்றுலா துறை சார்பில் உலக சுற்றுலா தினவிழா வருகிற 27-ந்தேதி கன்னியாகுமரியில் கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி அன்று காலையில் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் மினி மாரத்தான் ஓட்டம் நடக்கிறது. மாரத்தான் ஓட்டத்தை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைக்கிறார். பின்னர் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் வைத்து சுற்றுலா துறை சார்பில் தமிழக கலாச்சார முறைப்படி நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகம்இட்டு சங்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அவர்களுக்கு இனிப்புடன் சுற்றுலா கையேடும் நினைவு பரிசுகளும் வழங்கப்படுகிறது.

    இது தவிர பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இடையே சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினவிழாவையொட்டி பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி மாணவர்களின் பேரணியும் நடக்கிறது. ஓட்டல் மற்றும் லாட்ஜூகளில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி சதீஷ்குமார், உதவி சுற்றுலா அலுவலர் கீதா ராணி ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
    • மாணவ -மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் குமரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் "மறுசிந்தனையில் சுற்றுலா" என்ற தலைப்பில் உலக சுற்றுலா தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரியில் இன்று காலை சுற்றுலா விழிப்புணர்வு பேரணி நடந்தது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். உதவி சுற்றுலா அலுவலர் கீதாராணி, கல்லூரிமுதன்மை செயல் அலுவலர் மணிகிருஷ்ணா, முதல்வர் ராஜசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்தப்பேரணி கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகில் உள்ள பஸ் நிறுத்த சந்திப்பு, சர்ச் ரோடு சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு, பழைய பஸ் நிலைய ரவுண்டான சந்திப்பு, வழியாக காந்தி மண்டபம் முன்பு சென்றடைந்தது. பேரணியில் கல்லூரி மாணவ -மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் தங்களது கைகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சுற்றுலா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் இன்று பார்வையிட சென்ற சுற்றுலா பயணிகளுக்கு படகுத்துறையில் வைத்து சுற்றுலாத் துறை சார்பில் தமிழக கலாச்சார முறைப்படி நெற்றியில் சந்தனம் குங்குமம் திலகம் இட்டு சங்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு இனிப்புடன் சுற்றுலா கையேடும், நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    குமரி மாவட்ட உதவி சுற்றுலா அதிகாரிகள் சதீஷ்குமார், கீதாராணி ஆகியோர் நினைவு பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக மேலாளர் செல்லப்பா துணை மேலாளர்கள் பழனி, ராஜசேகரன், மற்றும் சுற்றுலா பாதுகாவலர்கள் கலந்து கொண்டனர். இது தவிர பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு இடையே சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின விழாவையொட்டி பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிஉள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    ×