search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிமையாளர்கள் கைது"

    • போலீசார் பல்வேறு மளிகை கடைகளில் திடீரென சோதனை மேற்கொண்டுள்ளனர்.
    • உரிமையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு 85 பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    பவானி:

    பவானியில் உள்ள மளி கை கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து சம்பவத்தன்று சப்-இ ன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் பவானி போலீசார் பல்வேறு மளிகை கடை களில் திடீரென சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    அப்போது அந்தியூர் பிரிவு அருகே உள்ள மளிகை கடை ஒன்றில் ஹான்ஸ் 68 பாக்கெட், கூல் லிப் 8 பாக்கெட் விற்ப னைக்காக வைத்திருந்த குற்றத்திற்காக பவானி, தேவராஜன் வீதியை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவர் கைது செய்யப்ப ட்டார்.

    அதேபோல் பவானி செங்காடு பகுதியில் மேற்கொ ண்ட சோதனை யில் ஹான்ஸ் 4 பாக்கெட், கூல் லிப் 4 பாக்கெட் விற்பனைக்கு வைத்திருந்த குற்றத்திற்காக சொக்கார ம்மன் நகர் பகுதியை சேர்ந்த வில்சன் (41) என்பவர் கைது செய்யப்பட்டார்.

    2 மளிகை கடையில் குட்கா விற்பனை செய்த குற்றத்திற்கு உரிமையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு 85 பாக்கெட் பறிமுதல் செய்ய ப்பட்டு உள்ளது. 

    ×