search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞர்கள் எழுச்சி நாள்"

    • திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், கிளைகள் தோறும் தி.மு.க. கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்க வேண்டும்.
    • முதியோர், மாணவ-மாணவிகள் என அனைவருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்.

    திருப்பூர்:

    தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வருகிற 1-ந் தேதி இளைஞர்களின் எழுச்சி தினமாக திராவிட மாடல் ஆட்சியின் பொன் நாளாக, தி.மு.க. கொடியேற்றி இனிப்புகள் வழங்கி ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். ஆட்சிக்கு வந்த 20 மாதங்களில் ஈடு இணையற்ற சாதனைகளை செய்து இந்தியாவில் தலைசிறந்த முதல்-அமைச்சர் என போற்றப்பட்டு நல்லாட்சி நடத்தி வருகிறார்.

    திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், கிளைகள் தோறும் தி.மு.க. கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்க வேண்டும். ஏழை, எளிய மக்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், மாணவ-மாணவிகள் என அனைவருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்.

    நிகழ்ச்சிகளில் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கிளை நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் அனைவரும் பங்கேற்று எழுச்சியோடு தலைவரின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    ×