search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரும்பு தடுப்புகள்"

    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது
    • போலீசாருக் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை நகரின் முக்கியமான சாலையாக தேரடி வீதி சாலை உள்ளது. நாள்தோறும் பல்லாயி ரக்கணக்கான மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    சமீப காலமாக சாலையின் நடுவில் பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தடுப்புகளுக்கும் சாலை யோர ஆக்கிரமிப்புகளுக்கும் இடையில் உள்ள குறுகிய சாலை வழியாக தேரடி வீதியை கடந்து செல்வது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாமல் நடந்து செல்பவர்களுக்கும் பெரும் சவாலாக இருந்து வந்தது.

    இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உரிய நேரத்திற்குள் அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பணிகளுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

    கடந்த சில தினங்களாக தேரடி வீதியில் சாலையின் நடுவில் இருந்த பேரி கார்டுகள் அகற்றப்பட்டு சாலைகள் விசாலமாக காட்சி தருகிறது. இதனால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி சாலையை கடந்து செல்ல முடிகிறது.

    இந்த மாற்றத்தை ஏற்படுத்தி திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்திற்கும், போக்கு வரத்து போலீசாருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • மக்கள் குடியேறி வருவதால் விழுப்புரம் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
    • இதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள விரிவாக்கப் பகுதிகளில் மக்கள் குடியேறி வருவதால் விழுப்புரம் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக விழுப்புரம் - புதுவை சிக்னலில் இருந்து கம்பன் நகர் வரை போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டு வந்தது. இந்த சாலையின் நடுவில் வைக்கப்பட்ட ரிப்லெக்ஸ் தடுப்பு கட்டை சேதமடைந்ததால், போக்குவரத்து நெரிசல் அதிகமானது. இதையடுத்து விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த் மற்றும் போலீசார், புதிய இரும்பினால் ஆன தடுப்புகளை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர். இதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    ×