search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரண்டாம் உலகப்போர்"

    இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட 450 கிலோ எடையிலான வெடிக்காத குண்டு கொல்கத்தாவில் தூர்வாரும் பணியின்போது கண்டெடுக்கப்பட்டது. #WWIIbomb #Kolkataport
    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் ஹூக்ளி நதியை ஒட்டியுள்ள கரைப்பகுதியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இந்நிலையில், நதியையொட்டியுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துறைமுகம் பகுதி அருகே நேற்று நடைபெற்ற இந்தபணியின்போது  450 கிலோ எடையிலான நான்கரை மீட்டர் நீளமுள்ள வெடிக்காத குண்டு கொல்கத்தாவில் அகழ்வு பணியின்போது கண்டெடுக்கப்பட்டது.


    இரண்டாம் உலகப்போரின்போது இந்த பகுதியை அமெரிக்க கப்பல்படையினர் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள இந்த வெடிகுண்டினை செயலிழக்க வைப்பதற்காக ராணுவம் மற்றும் கடற்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக கொல்கத்தா துறைமுகம் தலைவர் வினீத் குமார் தெரிவித்துள்ளார். #WWIIbomb #Kolkataport
    இரண்டாம் உலகப்போரின் போது பசிபிக் பெருங்கடல் பகுதியில் ரஷியா கைப்பற்றிய தீவுகள் விவகாரத்தில் அந்நாட்டுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள ஜப்பான் முன்வந்துள்ளது. #ShinzoAbe #JapanRussiapeace
    டோக்கியோ:

    இரண்டாம் உலகப்போரின் போது பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சில தீவு கூட்டங்களை ரஷியா கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

    குரிலே தீவுகள் என்றழைக்கப்படும் இந்த தீவு கூட்டத்தை தங்கள் நாட்டு வடக்கு எல்லை என்று ஜப்பான் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால், பல ஆண்டுகளாக ரஷியா - ஜப்பான் இடையே சுமூக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், சமீபத்தில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே ரஷியா சென்றிருந்தார். அங்குள்ள விளாடிவோஸ்ட்டோக் நகரில் ஜப்பான் பிரதமருடன் செய்தியாளர்களை சந்தித்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சர்ச்சைக்குரிய தீவுகள் பிரச்சனையில் எவ்வித முன்நிபந்தனைகளுமின்றி சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திகொள்ள இருநாடுகளும் முன்வர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்த கருத்துக்கு அப்போது பதில் தெரிவிக்காத ஷின்ஸோ அபே,  தாய்நாடு திரும்பியதும் இதுதொடர்பாக  இன்று கருத்து தெரிவித்துள்ளார்.


    வரும் 20-ம் தேதி ஜப்பான் நாட்டின் ஆளும்கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. தன்னுடன் இந்த பதவிக்கு மோதும் வேட்பாளருடன் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷின்ஸோ அபே, ‘ரஷியா அதிபர் தெரிவித்துள்ள கருத்துகளை நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். முதலில் எல்லை பிரச்சனைக்கு தீர்வுகண்ட பின்னர் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள ஜப்பான் தயாராக இருக்கிறது’ என குறிப்பிட்டார்.

    இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ளதால் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் இருதரப்பு கூட்டத்தில் சுமூகமான தீர்வு காணப்படலாம் என ரஷிய அதிபரிடம் நான் நம்பிக்கை தெரிவித்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.  #ShinzoAbe #JapanRussiapeace 
    ×