search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா வங்காளதேச எல்லை"

    • குற்றவாளிகளை பிடிப்பதற்காக துரத்தியபோது இந்திய கிராமத்திற்குள் தெரியாமல் நுழைந்ததாக தகவல்
    • கொடி அணிவகுப்பு கூட்டம் நடத்தப்பட்டு அதிகாரப்பூர்வ நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

    வங்காளதேசத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 வீரர்கள் நேற்று முன்தினம் எல்லை தாண்டி வந்து மேகாலயா மாநிலம் தெற்கு காரோ ஹில்ஸ் பகுதியில் உள்ள கிராமத்திற்குள் நுழைந்தனர். இந்தியா-வங்காளதேச சர்வதேச எல்லை வேலியை ஒட்டி அந்த கிராமம் அமைந்துள்ளது.

    அந்த வீரர்கள் துப்பாக்கி மற்றும் லத்திகள் வைத்திருந்ததால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், அவர்களிடம் சென்று விசாரித்து அவர்களை திரும்பி செல்லும்படி கூறி உள்ளனர். அவர்கள் தயங்கியதைடுத்து கிராம மக்கள் ஒன்றுசேர்ந்து வீரர்களை விரட்டியடித்தனர். இதனால் வீரர்கள் வந்த பாதையில் திரும்பிச் சென்றனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வங்காளதேச எல்லை பாதுகாப்பு படையிடம் (பிஜிபி), எடுத்துரைத்து, எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. 

    எல்லைப்பகுதியில் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக துரத்தியபோது இந்திய கிராமத்திற்குள் தெரியாமல் நுழைந்ததாக வங்காளதேசம் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த கிராமம் எல்லை வேலிக்கு முன்னால் இருப்பதால், வங்காளதேச வீரர்கள் குற்றவாளிகளை துரத்தும்போது தாங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததை உணரவில்லை. எல்லை விதிகளை மீறியது தொடர்பாக கொடி அணிவகுப்பு கூட்டம் நடத்தப்பட்டு அதிகாரப்பூர்வ நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சம்பவத்தில் இந்தியர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கப்படவில்லை" என்றார்.

    இந்திய எல்லைப் பாதுகாப்பு படைகள் தொடர்ந்து கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக அப்துல் மொமன் குற்றம்சாட்டினார்.
    டாக்கா:

    இந்தியா-வங்காளதேச எல்லையில் கடந்த 12ம் தேதி இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், வங்காளதேசத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். மாடுகளை கடத்துவதற்காக எல்லையின் இருபுறமும் சுமார் 60 பேர் கொண்ட கும்பல் கூடியது. அவர்களை இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் ரோந்துக் குழுவினர் தடுக்க முயன்றபோது, அவர்கள் ரோந்து குழுவினர் மீது கற்களை வீசத் தொடங்கினர். இரும்பு கம்பிகள் மற்றும் தடிகளால் தாக்கி உள்ளனர். தற்காப்புக்காக எல்லைப் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் எல்லையில் பதற்றத்தை உருவாக்கியது.

    இந்திய-வங்காள எல்லையில் நடந்த கொலைகள் துரதிர்ஷ்டவசமானது என்று வங்காளதேச வெளியுறவு மந்திரி ஏ.கே. அப்துல் மொமன் தெரிவித்தார். இந்திய எல்லைப் பாதுகாப்பு படைகள், எல்லையின் முன்களப் பகுதியில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று உயர்மட்டத்தில் இருந்து உறுதியளித்த போதிலும், வீரர்கள் தொடர்ந்து கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக அப்துல் மொமன் குற்றம்சாட்டினார்.

    ‘வங்காளதேசத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, இந்தியராக இருந்தாலும் சரி, எல்லையில் யாரும் கொல்லப்படுவதை பார்க்க நாங்கள் விரும்பவில்லை. இரண்டு அரசுகளும் இதை விரும்பவில்லை. பல்வேறு மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், தற்போது நடந்த கொலை கவலை அளிப்பதாக உள்ளது. இது இந்தியாவுக்கே அவமானம். எல்லையில் கொலை எதுவும் நடக்காது என்பதை இந்திய அதிகாரிகள் உறுதி செய்வார்கள் எதிர்பார்க்கிறோம்’ என்றும் வெளியுறவு மந்திரி அப்துல் மொமன் தெரிவித்தார்.
    ×