search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய வீரர்"

    அமைதிப்படைக்கு இந்திய வீரர்கள் இடம் பெற்றிருப்பதற்கு இந்தியாவுக்கு ஐ.நா. சபை 38 மில்லியன் டாலர் (சுமார் ரூ.266 கோடி) பாக்கி வைத்து இருக்கிறது. #UnitedNation #AntonioGuterres
    நியூயார்க்:

    உலகில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிற பல நாடுகளுக்கு ஐ.நா. அமைதிப்படைகளை அனுப்பி வைத்து வருகிறது. ஐ.நா. அமைதிப்படையில் பல நாட்டின் வீரர்களும் இடம் பெற்றிருக்கின்றனர்.

    அந்த வகையில் இந்திய வீரர்கள் இடம் பெற்றிருப்பதற்கு இந்தியாவுக்கு ஐ.நா. சபை 38 மில்லியன் டாலர் (சுமார் ரூ.266 கோடி) பாக்கி வைத்து இருக்கிறது.

    இதை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

    ஐ.நா.சபையின் நிதி நிலைமை குறித்து கவலை தெரிவித்த அவர், “கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி, படை வீரர்களையும், போலீசாரையும் அனுப்பி ஐ.நா. அமைதி நடவடிக்கையில் பங்களிப்பு செய்துள்ள நாடுகளுக்கு 265 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,855 கோடி) செலுத்த வேண்டியது உள்ளது. அதிகபட்சமாக இந்தியாவுக்கு 38 மில்லியன் டாலர் (சுமார் ரூ.266 கோடி) செலுத்த வேண்டியது இருக்கிறது” என குறிப்பிட்டார்.  #UnitedNation #AntonioGuterres
    டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்று அசத்தினார். #ISSFWorldCup #SourabhChoudhary
    புதுடெல்லி:

    சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது.

    இதில், ஆடவர் பிரிவுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. இதில், சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 245 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.



    இதன்மூலம் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் அதிக புள்ளிகளைப் பெற்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். #ISSFWorldCup #SourabhChoudhary
    உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 97-வது இடத்தை பிடித்துள்ளார். #PrajneshGunneswaran
    புதுடெல்லி:

    உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ, தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் ஆகியோர் முறையே முதல் 5 இடங்களில் தொடருகின்றனர்.

    சென்னையில் கடந்த வாரம் நடந்த சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் அரைஇறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6 இடங்கள் முன்னேறி 97-வது இடத்தை பிடித்துள்ளார். சென்னையை சேர்ந்த 29 வயதான பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஒற்றையர் பிரிவில் ‘டாப்-100 இடத்துக்குள் முதல்முறையாக நுழைந்துள்ளார். இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 100-வது இடத்துக்குள் முன்னேறிய 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஏற்கனவே சோம்தேவ்வர்மன், யுகி பாம்ப்ரி ஆகியோர் இந்த இலக்கை எட்டி இருந்தனர்.

    97-வது இடத்தை பிடித்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் அளித்த பேட்டியில், ‘என்னை பொறுத்தமட்டில் இது சிறந்த மைல் கல்லாகும். கடினமான உழைப்பின் மூலம் இந்த சீசனில் எனது பல இலக்குகளில் முதல் இலக்கை எட்டி இருக்கிறேன். இந்த ஆண்டு நல்ல தொடக்கம் கண்டுள்ளேன். இன்னும் பல விஷயங்களில் நான் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. உடல் தகுதிக்காக இன்னும் அதிகம் உழைக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ராம்குமார் 5 இடம் முன்னேறி 128-வது இடமும், காயத்தில் சிக்கி தவித்து வரும் யுகி பாம்ப்ரி 4 இடம் சரிந்து 156-வது இடமும், சகெத் மைனெனி 5 இடம் ஏற்றம் கண்டு 255-வது இடமும், சசிகுமார் முகுந்த் 22 இடம் முன்னேறி 271-வது இடமும் பெற்றுள்ளனர். இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் ரோகன் போபண்ணா 37-வது இடத்தில் நீடிக்கிறார். அவருடன் இணைந்து ஆடும் திவிஜ் சரண் ஒரு இடம் முன்னேறி 39-வது இடமும், லியாண்டர் பெயஸ் 7 இடம் ஏற்றம் கண்டு 75-வது இடமும், ஜீவன் நெடுஞ்செழியன் 2 இடம் முன்னேறி 77-வது இடமும், புரவ் ராஜா 3 இடம் முன்னேறி 100-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, செக் குடியரசு வீராங் கனை கிவிடோவா, ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப், அமெரிக்க வீராங் கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ், செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் முறையே முதல் 5 இடங்களில் நீடிக்கின்றனர். இந்திய வீராங்கனைகள் அங்கிதா ரெய்னா 3 இடம் முன்னேறி 165-வது இடத்தையும், கர்மான் கவுர் தாண்டி ஒரு இடம் சரிந்து 211-வது இடத்தையும் பெற்றுள்ளனர். #PrajneshGunneswaran
    இரட்டை சதம் அடிக்கும் நினைப்புடன் ஒரு போதும் பேட்டிங் செய்வதில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். #RohitSharma #IndianTeam
    மும்பை:

    மும்பை பிராபோர்னில் நேற்று முன்தினம் நடந்த 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை துவம்சம் செய்தது. இதில் துணை கேப்டன் ரோகித் சர்மா (20 பவுண்டரி, 4 சிக்சருடன் 162 ரன்), அம்பத்தி ராயுடு (100 ரன்) சதத்தின் உதவியுடன் இந்திய அணி நிர்ணயித்த 378 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.2 ஓவர்களில் 153 ரன்னில் சுருண்டது. ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் ஆட்டம் இழந்த போது 37 பந்துகள் மீதம் இருந்தது. கடைசி வரை களத்தில் நின்றிருந்தால் நிச்சயம் தனது 4-வது இரட்டை சதத்தை எட்டியிருப்பார்.



    வெற்றிக்கு பிறகு 31 வயதான ரோகித் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

    எப்போதுமே பேட்டிங்கின் போது சதம் எடுக்க வேண்டும் என்றோ, இரட்டை செஞ்சுரி போட வேண்டும் என்றோ நினைத்து ஆடுவதில்லை. முடிந்த வரை நிறைய ரன்கள் குவித்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனே விளையாடுவேன். இதுவரை நான் மூன்று இரட்டை சதங்கள் அடித்துள்ளேன். ஒவ்வொரு முறையும் இரட்டை சதம் அடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. இந்த ஆட்டத்தின் போது கூட எதிர்முனையில் நின்ற அம்பத்தி ராயுடு என்னிடம் வந்து, இரட்டை சதம் அடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார். ஆனால் நான் எனது பேட்டிங் மீது மட்டும் கவனம் செலுத்தினேனே தவிர, இரட்டை சதம் அடிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. அது மட்டுமின்றி இந்த மைதானத்தில் ‘சேசிங்’ செய்வது கடினமாக இருக்காது. அதனால் அணிக்கு போதுமான ரன்கள் குவிப்பதை உறுதிசெய்யும் முனைப்புடன் செயல்பட்டேன். மற்றபடி இரட்டை சதம் எனது மனதில் தோன்றவில்லை.

    அம்பத்திராயுடுவின் பேட்டிங் அருமையாக இருந்தது. இரண்டு விக்கெட்டுகளை சீக்கிரம் இழந்த நிலையில் பார்ட்னர்ஷிப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியமாக இருந்தது. அந்த நெருக்கடியிலும் சூழ்நிலைக்கு தகுந்தபடி அவர் அபாரமாக ஆடினார்.

    ராயுடுவின் இன்னிங்ஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. 4-வது பேட்டிங் வரிசை பிரச்சினையை அவர் சரிசெய்து விட்டதாக நம்புகிறேன். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரை இந்த பேட்டிங் வரிசை குறித்து விவாதிக்க வேண்டியது இருக்காது.

    இடக்கை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமதுவுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. இந்த ஆட்டத்தில் பந்தை நன்கு ‘ஸ்விங்’ செய்தார். அவர் இது போன்று ‘ஸ்விங்’ செய்தால், உலகின் எந்த பேட்ஸ்மேனுக்கும் குடைச்சல் கொடுக்க முடியும்.

    உலக கோப்பை போட்டிக்கு முன்பாக இன்னும் நிறைய ஆட்டங்கள் உள்ளன. அதனால் உலக கோப்பை அணியில் யாருக்கும் இடம் உறுதி என்று இப்போது சொல்ல மாட்டேன். ஆனாலும் கலீல் அகமது தொடர்ந்து சிறப்பாக பந்து வீசுவார் என்று நம்புகிறேன். நியூசிலாந்திலும் விளையாட உள்ளோம். அதன் பிறகு தான் இங்கிலாந்தில் உலக கோப்பை போட்டி நடக்கிறது. இவ்விரு நாடுகளிலும் பந்து அதிகமாக ‘ஸ்விங்’ ஆகும். அவ்விரு நாட்டு சீதோஷ்ணநிலையிலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

    மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நான் நிறைய உள்ளூர் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். இங்கு எப்போதுமே உற்சாகமாக ஆடுவது உண்டு. நாம் பழக்கப்பட்ட இடத்தில் ஆடும் போது நம்பிக்கையுடன் போட்டியை எதிர்கொள்ள முடியும். அந்த மனநிலையுடன் தான் இங்கு இறங்கினேன். இந்த ஆடுகளத்தன்மையை நான் நன்கு அறிவேன். இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு சொர்க்கபுரியாக இருந்தது என்று நீங்கள் கூறலாம். என்னை பொறுத்தவரை பேட்டிங், பந்து வீச்சு இரண்டுக்குமே ஒத்துழைப்பு தந்தது என்று சொல்வேன். இந்தியாவில் நான் ஆடிய சிறந்த ஆடுகளங்களில் இதுவும் ஒன்று.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

    தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
    வெளிநாட்டில் விளையாடும் போது, அந்த தொடர் நிறைவடையும் வரை மனைவி மற்றும் குடும்பத்தாரை தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கோரிக்கை வைத்துள்ளார். #ViratKohli #IndianPlayer
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது வீரர்கள் 2 வாரங்கள் வரை மட்டுமே தங்களது மனைவி அல்லது காதலியை தங்களுடன் தங்கவைத்துக் கொள்ளலாம். அதன் பிறகு திருப்பி அனுப்பி விட வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் புதிய விதியை அமல்படுத்தியது.

    இந்த நிலையில் இந்த விதியை மாற்றி, வெளிநாட்டில் விளையாடும் போது, அந்த தொடர் நிறைவடையும் வரை தங்களுடன் மனைவி மற்றும் குடும்பத்தாரை தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வீரர்கள் சார்பில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய கோரிக்கை வைத்துள்ளார்.

    இது குறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தரப்பில் கேட்ட போது, ‘வெளிநாட்டு பயணத்தின் போது தொடர் முடிவடையும் வரை மனைவியை உடன் வைத்துக் கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோலி கோரிக்கை வைத்துள்ளது உண்மை தான். ஆனால் அது குறித்து தற்சமயம் எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வான பிறகு அவர்களின் முடிவுக்கு விட்டுவிடப்போகிறோம். அதனால் ஏற்கனவே உள்ள விதிமுறையில் இப்போது எந்த மாற்றமும் இருக்காது’ என்று தெரிவிக்கப்பட்டது.இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த வெளிநாட்டு பயணம் நவம்பர் 21-ந்தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய அணி 20 ஓவர் போட்டி, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.  #ViratKohli #IndianPlayer 
    சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருப்பதாக இந்திய ஆக்கி அணி வீரர் சர்தார் சிங் தெரிவித்தார். #SardarSingh #Retirement #InternationalHockey
    புதுடெல்லி:

    இந்திய ஆக்கி அணியின் முன்னணி நடுகள வீரரும், முன்னாள் கேப்டனுமான சர்தார் சிங் 2006-ம் ஆண்டில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்தார்.

    அரியானாவை சேர்ந்த 32 வயதான சர்தார் சிங் இதுவரை 350 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். 2008-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்தார். சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார். கடந்த முறை தங்கப்பதக்கம் வென்று இருந்த இந்திய அணி ஆசிய விளையாட்டு போட்டியில் இந்த முறை வெண்கலப்பதக்கம் தான் பெற்றது. சர்தார் சிங் ஆட்டம் எதிர்பார்த்தபடி அமையவில்லை.



    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஓமனில் அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கான பயிற்சி முகாம் புவனேஸ்வரத்தில் வருகிற 16-ந் தேதி முதல் அக்டோபர் 14-ந் தேதி வரை நடக்கிறது. தேசிய பயிற்சி முகாமுக்கான 25 வீரர்கள் பட்டியலை, ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது. இதில் சர்தார் சிங் பெயர் இடம் பெறவில்லை.

    இந்த நிலையில் சர்தார் சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனது வாழ்க்கையில் போதுமான அளவுக்கு ஆக்கி விளையாடி விட்டேன். 12 ஆண்டுகள் என்பது நீண்ட காலமாகும். வரும் தலைமுறையினருக்கு வழி விடுவதற்கு இதுவே சரியான தருணமாகும். எனது குடும்பத்தினர் மற்றும் ஆக்கி இந்தியா நிர்வாகிகள், நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த ஓய்வு முடிவை எடுத்தேன். ஆக்கியை தவிர்த்து எனது வாழ்க்கையை சிந்திக்க இது சரியான நேரமாக கருதுகிறேன்.

    ஓய்வு முடிவு எடுக்க எனது உடல் தகுதி காரணம் இல்லை. இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து விளையாடக்கூடிய உடல் தகுதியுடன் தான் இருக்கிறேன். எல்லாவற்றுக்கும் ஒரு காலகட்டம் உண்டு. வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர இது தான் சரியான நேரம் என்று நினைக்கிறேன். எனது ஓய்வு முடிவை தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங்குக்கு தெரிவித்து விட்டேன். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சர்தார் சிங் டெல்லியில் நாளை ஓய்வு முடிவை முறைப்படி அறிவிப்பார் என்று தெரிகிறது. 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரை விளையாட ஆர்வமாக இருப்பதாக சமீபத்தில் கருத்து தெரிவித்து இருந்த சர்தார்சிங் கட்டாயத்தின் பேரில் ஓய்வு முடிவுக்கு வந்தாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தேசிய பயிற்சி முகாமுக்கான வீரர்கள் பட்டியலில் உங்களுக்கு இடம் கிடைக்காததால் ஓய்வு முடிவுக்கு வந்தீர்களா? என்ற கேள்விக்கு சர்தார் சிங் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

    அரியானா போலீஸ் துறையில் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வரும் சர்தார் சிங் 2 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர். 2012-ம் ஆண்டில் அர்ஜூனா விருதையும், 2015-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.  #SardarSingh #Retirement #InternationalHockey 
    சர்வதேச தடகள சம்மேளனம் சார்பில் கண்டங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அர்பிந்தர் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். #ArpinderSingh #IAAF
    ஆஸ்ட்ராவா:

    சர்வதேச தடகள சம்மேளனம் சார்பில் கண்டங்களுக்கு இடையிலான (கான்டினென்டல் கோப்பை) தடகள சாம்பியன்ஷிப் போட்டி 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 3-வது கான்டினென்டல் தடகள போட்டி செக்குடியரசு நாட்டின் ஆஸ்ட்ராவா நகரில் 2 நாட்கள் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான மும்முறை நீளம் தாண்டுதலில் (டிரிபிள் ஜம்ப்) ஆசியா-பசிபிக் அணி சார்பில் பங்கேற்ற இந்திய வீரர் அர்பிந்தர்சிங் 16.59 மீட்டர் நீளம் தாண்டி வெண்கலப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான அமெரிக்காவின் கிறிஸ்டியன் டெய்லர் தங்கப்பதக்கமும் (17.59 மீட்டர்), பர்கினோ பாசோ நாட்டைச் சேர்ந்த ஹக்ஸ் பேப்ரிஸ் ஜாங்கோ வெள்ளிப்பதக்கமும் (17.02 மீட்டர்) பெற்றனர்.

    பஞ்சாப்பை சேர்ந்த 25 வயதான அர்பிந்தர்சிங், இந்த போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். இவர் சமீபத்தில் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றது நினைவிருக்கலாம்.  #ArpinderSingh #IAAF
    உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அங்குர் மிட்டல் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். #ISSFWCH #AnkurMittalGold
    சாங்வான்:

    52-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ‘டபுள் டிராப்’ பந்தயத்தில் இந்திய வீரர் அங்குர் மிட்டல், சீன வீரர் யியாங் யங், சுலோவக்கியா வீரர் ஹூபெர்ட் ஆந்ரேஜ் ஆகியோர் 150-க்கு 140 புள்ளிகள் குவித்து சமநிலை வகித்தனர்.

    மூவருக்கும் இடையே நடந்த ஷூட்-அவுட் முடிவில் அரியானாவைச் சேர்ந்த 26 வயதான அங்குர் மிட்டல் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். சீன வீரர் யியாங் யங் வெள்ளிப்பதக்கமும், சுலோவக்கியா வீரர் ஹூபெர்ட் ஆந்ரேஜ் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். இதன் அணிகள் பிரிவில் அங்குர் மிட்டல், முகமது அசாப், ஷர்துல் விஹான் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 409 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் பெற்றது.

    இத்தாலி அணி 411 புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும், சீனா அணி 410 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும் வென்றன. இந்த போட்டி தொடரில் இந்தியா இதுவரை 7 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களுடன் 3-வது இடம் வகிக்கிறது. #ISSFWCH #AnkurMittalGold
    உலக துப்பாக்கி சுடுதல் ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பந்தயத்தில் இந்திய இளம் வீரர் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். #SaurabhChaudhary #ShooterWorldChampionship
    சாங்வான்:

    உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பந்தயத்தில் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 245.5 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் ஜூன் மாதம் நடந்த உலக கோப்பை ஜூனியர் போட்டியில் இதே பந்தயத்தில் தான் படைத்து இருந்த உலக சாதனையை (243.7 புள்ளிகள்) சவுரப் சவுத்ரி தகர்த்து நேற்று புதிய சாதனை படைத்தார்.



    உத்தரபிரதேசத்தை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவரான சவுரப் சவுத்ரி சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் தென்கொரியா வீரர் லிம் ஹோஜின் (243.1 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும், மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன் சிங் சீமா (218 புள்ளிகள்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். இதன் அணிகள் பிரிவில் சவுரப் சவுத்ரி, அர்ஜூன் சிங் சீமா, அன்மோல் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1730 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வென்றது. தென்கொரியா அணி (1,732 புள்ளிகள்) புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தது. ரஷிய அணி (1,711 புள்ளிகள்) வெண்கலப்பதக்கம் பெற்றது.

    ஜூனியர் ஆண்களுக்கான டிராப் அணிகள் போட்டியில் அமன் அலி எலாஹி, விவான் கபூர், மனவ்ஆதித்யா சிங் ரதோர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 348 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியது. ஆஸ்திரேலிய அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்கள் வென்று 3-வது இடத்தில் உள்ளது. #SaurabhChaudhary  #ShooterWorldChampionship 
    ‘இங்கிலாந்து மண்ணில் தோல்வி பற்றி கவலைப் படாமல் இந்திய வீரர்கள் ஜாலியாக காபி அருந்தி மகிழ்கிறார்கள் போலும்’ என்று முன்னாள் வீரர் சந்தீப் பட்டீல் விமர்சித்துள்ளார். #SandeepPatil #Coffee #ViratKohli
    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக அங்கு அணியின் திட்டம் என்ற கேள்விக்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரியுடன் இணைந்து பேட்டி அளித்த இந்திய கேப்டன் விராட் கோலி, ‘கடந்த முறை இங்கிலாந்துக்கு சென்ற போதும் இப்படி தான் கேட்டார்கள். அதற்கு நான் இங்கிலாந்துக்கு சென்றதும் அங்குள்ள வீதிகளில் ஜாலியாக நடந்து சென்று காபி அருந்தி மகிழ்வேன். என்னுடைய சிந்தனை வித்தியாசமானது’ என்று பதில் அளித்தார்.



    அவரது இந்த கூற்றை இந்திய முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான சந்தீப் பட்டீல் கேலி செய்து சாடியுள்ளார். பட்டீல் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், ‘முதல் இரு டெஸ்டுகளில் இந்திய அணியின் செயல்பாட்டை பார்க்கும் போது விராட் கோலியின் கருத்தை இந்திய வீரர்கள் சீரியசாக எடுத்துக் கொண்டார்கள் போல் தான் தோன்றுகிறது. இங்கிலாந்தில் நிலவும் சீதோஷ்ண நிலையில் அவர்கள் உண்மையிலேயே நல்ல காபி குடித்துவிட்டு உற்சாகமாக இருக்கிறார்கள் போலும்.

    இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. ஆனால் விராட் கோலியும் ரவிசாஸ்திரியும் இணைந்து வீரர்களுக்கு ஓய்வு தேவை என்று கூறி 4 நாள் பயிற்சி ஆட்டத்தையும் 3 நாட்களாக குறைத்து விட்டார்கள். இந்திய அணியின் மோசமான ஆட்டம் குறித்து கவாஸ்கர், தெண்டுல்கர், கங்குலி போன்ற ஜாம்பவான்கள் தங்களது கவலையை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களின் அறிவுரையை இந்திய வீரர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டது போல் தெரியவில்லை.

    தற்போது அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் அசாதாரணமான திறமை கொண்டவர்கள். நான் தேர்வு குழு தலைவராக இருந்த போது அதை அறிவேன். ஆனால் இப்போது களத்தில் ஏதோ அறிமுக போட்டி போன்று பயந்து கொண்டு விளையாடுகிறார்கள். நான் முன்பு சொன்னது போல் கிரிக்கெட் ஒரு குரூரமான விளையாட்டு. இங்கு எதுவும் நிலையானது கிடையாது. முந்தைய நாள் ஹீரோவாக இருப்பவர்கள், இன்று ஜீரோவாகி விடுவார்கள். இந்த இங்கிலாந்து பயணத்தில் ஏற்கனவே 70 சதவீதம் போட்டி முடிந்து விட்ட நிலையில் நாம் இன்னும் காபி குடித்துக் கொண்டு இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார். #SandeepPatil #Coffee #ViratKohli
    உலக டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் 46 இடங்கள் முன்னேறி 115-வது இடத்தை பிடித்துள்ளார். #Ramkumar #ATPRanking
    நியூயார்க்:

    உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (9,310 புள்ளிகள்) முதலிடத்தில் தொடருகிறார். சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (7,080 புள்ளிகள்) 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

    அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), டிமிட்ரோவ் (பல்கேரியா), மரின் சிலிச் (குரோஷியா) ஆகியோர் முறையே 3 முதல் 7 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர். டோமினிச் திம் (ஆஸ்திரியா) ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தையும், ஜான் இஸ்னர் (அமெரிக்கா) ஒரு இடம் சரிந்து 9-வது இடத்தையும் பெற்றுள்ளனர். ஜோகோவிச் (செர்பியா) 10-வது இடத்தில் நீடிக்கிறார்.

    இந்திய வீரர் யுகி பாம்ப்ரி ஒரு இடம் ஏற்றம் கண்டு 86-வது இடத்தை பெற்றுள்ளார். அமெரிக்காவின் உள்ள நியூபோர்ட்டில் நடந்த ‘ஹால் ஆப் பேம்’ சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீரர் ஸ்டீவ் ஜான்சனிடம் தோல்வி கண்டு 2-வது இடம் பெற்ற இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் 46 இடங்கள் முன்னேறி 115-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் சிமோனா ஹாலெப் (ருமேனியா), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), ஏஞ்சலில் கெர்பர் (ஜெர்மனி), ஸ்விடோலினா (உக்ரைன்), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), கிவிடோவா (செக்குடியரசு), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), ஜூலியா கோர்ஜெஸ் (ஜெர்மனி) முறையே 1 முதல் 10 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர்.
    ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென், ஜூனியர் உலக சாம்பியன் குன்லாட் விடிட்ஸ்ரனுக்கு (தாய்லாந்து) அதிர்ச்சி அளித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். #LakshyaSen
    புதுடெல்லி:

    ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் ஜூனியர் உலக சாம்பியன் குன்லாட் விடிட்ஸ்ரனுக்கு (தாய்லாந்து) அதிர்ச்சி அளித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே கவுதம் தாக்கர் (1965-ம் ஆண்டு), பி.வி.சிந்து (2012-ம் ஆண்டு) ஆகியோர் சாம்பியன் ஆகி இருக்கிறார்கள்.

    உத்தரகாண்ட்டை சேர்ந்த 16 வயதான லக்‌ஷயா சென் கூறுகையில், ‘இந்த போட்டியில் நெருக்கடியின்றி எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி குன்லாட்டை வீழ்த்தினேன். தங்கப்பதக்கத்தை வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது நிச்சயம் எனது நம்பிக்கைக்கு ஊக்கமளிக்கும்’ என்றார்.
    ×