search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்"

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திட்டக்குடி தாலுகா அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பெண்ணாடம்:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் வேலை செய்த பயனாளிகளுக்கு அரசு அறிவித்த 223 ரூபாய் வழங்க வேண்டும், குடிநீர், தெரு மின்விளக்கு, தொகுப்பு வீடுகளின் பராமரிப்பு பணிகள் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும், ஒன்றியம் முழுவதும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திட்டக்குடி தாலுகா அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட குழு உறுப்பினர் உலகநாதன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் காசிநாதன், ரஜினி, கோவிந்தன், அம்பிகா, பழனிவேல், கருப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் கலியமூர்த்தி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், முருகையன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    ×