search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய ஒருநாள் அணி"

    • ஷ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்திய அணியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அந்த அணி விளையாடுகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் தொடரில் விளையாடி வரும் இந்திய வீரர்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா செல்ல உள்ளனர்.

    அதன்படி இன்று அறிவிக்கப்பட்ட ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் கேப்டனாக ஷிகர் தவானும், துணை கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ரஜத் படிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் , ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அவேஷ் கான், முகமது சிராஜ், தீபக் சாகர் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

    இதில் முகேஷ் குமார் மற்றும் ரஜத் படிதார் அறிமுக வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 6ஆம் தேதி லக்னோவில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

    ×