search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணைய வழி"

    • சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியில் கலந்தாய்வு 2 நாட்கள் நடைபெற உள்ளது.
    • தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் சேர்க்கை கட்டணம் அன்றே செலுத்த வேண்டும்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 2022-23-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை முதலாமாண்டு பாடப்பரிவுகளுக்கு அரசு கலைக் கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் ஒவ்வொரு பாடப்பரிவிலும் கூடுதலாக 20 சதவீத இடங்களை அதிகரித்து, மாணவர்கள் சேர்க்கை நடத்த அரசு அனுமதித்துள்ளது. அதனடிப்படையிலும் பல்கலைக் கழக அனுமதி பெற்று கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட இடங்கள் மற்றும் ஏற்கனவே நிரப்பப்படாத பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களுகான காலி இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான இறுதி கட்ட கலந்தாய்வு (இணைய வழியில்) விண்ணப்பித்தவர்களுக்கு இனச்சுழற்சி மற்றும் தரவரிசை அடிப்படையில் 26 -ந்தேதி மற்றும் 27- ந்தேதி ஆகிய 2 நாள்கள் நடைபெறுகிறது.

    கலந்தாய்வு தேதி மற்றும் விபரம்: 26.09.2022- பாடப்பிரிவுகள் பி.எஸ்.சி. கணிதம் - தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி, புள்ளியியல், இயற்பியல், பொது வேதியியல், தொழில் வேதியியல், சுழற்சி & 2 கணினி அறிவியல் சுழற்சி-1 & 2, பி.சி.ஏ. கணினி பயன்பாட்டியல், தாவரவியல் - தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி. விலங்கியல் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி. 27-9-2022 கலந்தாய்வு: B.A.தமிழ், B.A,ஆங்கிலம் கழற்சி-1 & ×2} பி.ஏ. பொருளியல் - தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி பி.காம் , சுழற்சி-1 & -2 மற்றும் பி.பி.ஏ. வணிக நிர்வாகவியல். இணைய வழியில் விண்ணப்பித்தவர்கள் காலை 10 மணிக்கு கல்லூரியில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் தங்கள் அசல் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ். சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் சான்றிதழ்களின் நகல் 5 பிரதிகள் நிழற்படம் 5 பிரதிகள் மற்றும் 2 எடுத்து. வரவேண்டும். தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் சேர்க்கை கட்டணம் அன்றே செலுத்த வேண்டும். இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் இனச்சுழற்சி மற்றும் தரவரிசை அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் .மேலும் காலை 10.30 மணிக்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கல்லூரி முதல்வர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    ×