search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து பெண்"

    இந்தோனேசிய குடியுரிமை அதிகாரியை கன்னத்தில் அறைந்த இங்கிலாந்து பெண்ணுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். #BritishTourist #Prison #Slapping #IndonesiaOfficer
    ஜகர்த்தா:

    இங்கிலாந்தை சேர்ந்த டக்காடஸ் (வயது 42) என்ற பெண் இந்தோனேசியா சென்றிருந்தார். இவர் தனது விசா காலம் முடிவடைந்த பின்னரும் 4 மாதங்களுக்கு மேல் அங்கு தங்கி இருப்பது குடியேற்ற அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பாலி மாகாணத்தில் உள்ள விமான நிலையத்துக்கு வந்த டக்காடசை குடியேற்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். விசா கலாம் முடிந்த பின்னரும் இந்தோனேசியாவில் தங்கி இருந்ததற்காக 3,500 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம்) அபராதமாக செலுத்தும்படி அதிகாரிகள் வலியுறுத்தினர். இதனை ஏற்காத டக்காடஸ் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டார். அத்துடன் குடியேற்ற அதிகாரி ஒருவரின் கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து குடியேற்ற அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

    பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, டக்காடசுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.  #BritishTourist #Prison #Slapping #IndonesiaOfficer 
    இங்கிலாந்தில் பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை கொன்று புதைத்த பெண்ணுக்கு 9 ஆண்டு சிறைத்தணடனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    லண்டன், ஜூலை. 17-

    இங்கிலாந்தை சேர்ந்தவர் பார்பரா கடம்பீஸ் (63). இவர் திடீரென போலீஸ் நிலையம் சென்று கடந்த 2006-ம் ஆண்டில் தனது தந்தை கெனித்தை கொலை செய்து வீட்டு தோட்டத்தில் புதைத்து விட்டதாக கூறினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பார்பரா வீட்டுக்கு சென்று புதைத்த இடத்தில் தோண்டினர். அங்கு எலும்பு கூடாக இருந்த கெனித் சடலத்தை கைப்பற்றினர்.

    அதையடுத்து பார்பரா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தனது தந்தையை கொலை செய்தது ஏன் என போலீசில் திடுக் கிடும் வாக்கு மூலம் அளித் தார்.

    அதில், ‘‘எனது தந்தை சிறுவயதில் இருந்தே எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். என்னைப் போல பல பெண்களிடம் தவறாக நடந்து இருக்கிறார். 2006-ம் ஆண்டில் அவர் (கெனித்) வைத்திருந்த போட்டோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

    ஏனெனில் பல சிறுமி களின் நிர்வாண போட்டோக் களும் இருந்தது. அதில் என்னுடைய போட்டோவும் இருந்தது. என்னை நிர்வாண மாக்கி பலர் முன்னிலையில் கெனித் போட்டோ எடுத்துள் ளார். இதெல்லாம் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்த அவரை கொன்று வீட்டில் புதைத்தேன்’’ என்றார்.

    எனவே அவர் மீது கோர்ட் டில் வழக்கு தொடரப்பட் டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 9 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.

    ×