search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆனித்திருமஞ்சனம்"

    பஞ்சபூதங்களையும் தன்னுள் அடக்கிய சிதம்பரம் நடராஜரை ஒரு மனிதன் வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்கும் பட்சத்தில் முக்தி அடைவான் என்பது நம்முன்னோர்கள் சொன்னவழி.
    நடராஜரை 2 வழிகளில் தரிசிக்க வேண்டும்.

    1)மேலிருந்து கீழாக முதலில் திருமுகத்தை தரிசிக்க வேண்டும், பின்னர் அபய ஹஸ் தத்தையும் (அபயம் அளிக்கும் வலது கை) தூக்கிய திருவடியையும் மனதை ஒருமுகப் படுத்தி தரிசிக்க வேண்டும்.

    2) கீழிருந்து மேலாக முதலில் தூக்கிய திருவடியையும், அபயஹஸ்தத்தையும், திரு முகத்தையும் தரிசிக்க வேண்டும்.

    இவ்வாறு 2 வழிகளில் நடராஜரை தரிசிக்க வேண்டும்.

    நடராஜர் ஓம் என்ற பிரணவ மந்திர வடிவில் காட்சி அளிக்கிறார். அவருக்கு துணையாக சிவகாமி அம்மன் அருள் செய்கிறார். இந்த நடராஜரும், சிவகாமியும் நாம் பார்க்கும் போது 2 உருவங்களாக தெரிந்தாலும் தத்துவப்படி அவர்கள் ஒன்றாக இணைந்தே அருள்செய்கிறார்கள். உதாரணமாக அர்த்தநாரீஸ்வரர் வடிவில் சிவனும்-சக்தியும் இணைந்தே காட்சி அளிக்கின்றனர்.

    பரத கலையை கற்றுக்கொடுப்பவர்களும், பரத கலையை கற்றுக்கொள் பவர்களும் மாற்று மதத்தினராக இருந்தாலும் கூட அவர்கள் சிதம்பர நடராஜரை முன்னுதாரணமாக வைத்து வணங்குகிறார்கள். தங்களுடைய வீடுகள், வரவேற்பு அறைகளில் நடராஜர் சிலையை வைத்து மகிழ்கிறார்கள்.

    இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பிரமுகர்களுக்கு இந்தியாவின் சார்பில் நம்நாட்டு அடையாள சின்னமாக நம்முன்னோர்கள் நடராஜர் சிலையையே பரிசாக அளிக்க அனுமதித்தது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    சைவ சமயத்துக்கு உருவகமாக 2 திருவுருவங்கள் பழக்கத்தில் உள்ளன. முதலில் சிவலிங்க வழிபாட்டை கூறலாம். சிவலிங்கத்துக்கு சிறப்பு உருவமாக சிதம்பரம் நடராஜர் சிலையை நம்முன்னோர்கள் கண்டிருக்கிறார்கள் என்பது மேன்மையான சிறப்பாகும்.

    மேலும் பஞ்சபூதங்களையும் தன்னுள் அடக்கிய சிதம்பரம் நடராஜரை ஒரு மனிதன் வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்கும் பட்சத்தில் முக்தி அடைவான் என்பது நம்முன்னோர்கள் சொன்னவழி.

    பக்தர்கள் தாங்கள் பிறந்த நாளிலோ, பிறந்த நட்சத்திரத்திலோ நடராஜ பெருமானை வழிபடுவது சிறப்பானதாகும்.

    தகவல்:

    வெங்கடேசதீட்சிதர்
    சிதம்பரம் நடராஜர் கோவில்.
    செல்: 98944-06321.
    ஆனி திருமஞ்சன தினத்தன்று விரதமிருந்து நடராஜரை தரிசனம் செய்தால், மக்களின் வேண்டுதல்கள் அனைத்தும் மிக விரைவில் நிறைவேறும்.
    ஆனி திருமஞ்சன தினத்தன்று விரதமிருந்து நடராஜரை தரிசனம் செய்தால், மக்களின் வேண்டுதல்கள் அனைத்தும் மிக விரைவில் நிறைவேறும். மக்கள் நல்ல பயனை அடைவார்கள். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். ஆண்-பெண் இருபாலரின் திருமணம் போன்ற வைபவங்கள் நடக்கும்.

    இந்த ஆனியை தொடர்ந்து ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை என மாதங்கள் வளர்ந்து வரும். அந்த காலங்களில் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும்.

    அனைத்து பக்தர்களும் அவரவர்களின் ஊர்களுக்கு அருகே உள்ள சிவன் கோவிலுக்கு சென்று அங்கு நடைபெற கூடிய ஆனி திருமஞ்சன மகாஅபிஷேகத்தில் தங்களால் முடிந்த அபிஷேக பொருட்களை கொடுத்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

    ஆனி திருமஞ்சன வழிபாடு சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து நடராஜர் சன்னதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் தாங்கள் பிறந்த நாளிலோ, பிறந்த நட்சத்திரத்திலோ நடராஜ பெருமானை வழிபடுவது சிறப்பானதாகும்.
    ஆனி மாதத்திலும், மார்கழி மாதத்திலும் வரும் நடராஜர் தரிசனத்தைக் கண்டுகளிப்பவர்கள் பகல் முழுவதும் விரதம் இருந்து சிவன் சன்னிதியில் சிவபுராணம் பாடவேண்டும்.
    சிவபெருமானுக்குரிய இரண்டு தரிசனங்களில் முதல் தரிசனம் ஆனி மாதத்திலும், இரண்டாவது தரிசனம் மார்கழி மாதத்திலும் நடைபெறும். மிதுனம் நவக்கிரகங்களில் புதனுக்கு சொந்த வீடாகும். புதன் கல்விக்குரிய கிரகமாக கருதப்படுகிறது. எனவே கல்வி, கேள்விகளில் தேர்ச்சி பெற மாணவச் செல்வங்கள் இம்மாதத்தில் நடைபெறும் இதுபோன்ற விழாக்களில் கலந்துகொண்டு வழிபட்டால் முதன்மை பெற வழிவகுக்கும்.

    சிவராத்திரி அன்று சிவனை நாம் வழிபடும் போது இரவு முழுவதும் விழித்திருந்து சிவபுராணம் பாடி சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். ஆனால் ஆனி மாதத்திலும், மார்கழி மாதத்திலும் வரும் நடராஜர் தரிசனத்தைக் கண்டுகளிப்பவர்கள் பகல் முழுவதும் விரதம் இருந்து சிவனுக்குரிய அபிஷேக ஆராதனைகளைக் கண்டுகளிப்பதோடு நடராஜப் பெருமானையும் தரிசித்து அவர் சன்னிதியில் சிவபுராணம் பாடவேண்டும்.

    ‘திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பது பழமொழி. அந்த அடிப்படையில் நாம் இறைவன் சன்னிதியில் திருவாசகம் பாடினால் அவர் தரிசனம் நமக்கு கிடைப்பதோடு மட்டுமல்லாமல், கரிசனத்தோடு வந்து காட்சி கொடுத்து அருள் வழங்குவார் என்பது நம்பிக்கை.

    அன்றைய தினம் சிவபிரானுக்கு நடைபெறும் அபிஷேகத்தில், பால் அபிஷேகம் பார்த்தால் நான்கு திசைகளில் இருந்தும் நல்ல தகவல் வந்துகொண்டே இருக்கும். பன்னீர் அபிஷேகம் பார்த்தால் எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும். எனவே அந்த அற்புத தரிசனம் தரும் ஆனி மாதம் ஒரு அபூர்வ மாதமாகும். அகிலத்து மாந்தர்களுக்கு அனைத்து நலன்களையும் தரும் வழிபாட்டிற்குரிய மாதம் இதுவாகும். மனிதப்பிறவி எடுத்ததன் பயனே இறைவனுடைய அழகை கண்ணார காண்பதற்காகவே என்கிறார்கள் சான்றோர்கள். அந்த இறைவன் தரிசனம் தரும் நாளில் நாம் உள்ளன்போடு வழிபட்டு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.

    கலைகளைக் கற்று காசினியெங்கும் புகழ்பெற வேண்டுமென்று விரும்புபவர்கள், நடராஜப் பெருமானை முழுமையாக வழிபட வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சிவபெருமானுக்குரிய இரண்டு தரிசனங்களில் முதல் தரிசனம் ஆனி மாதத்திலும், இரண்டாவது தரிசனம் மார்கழி மாதத்திலும் நடைபெறும். அதில் வருடத் தொடக்கத்தில் வரும் ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தன்று நடராஜர் அபிஷேகம் நடைபெறும். இந்த மாதத்தில் ஆடலரசனைப் பாடிப் பணிந்து வழிபட்டால் கோடி கோடியாய் நன்மை கிடைக்கும். மேலும் அன்றைய தினம் சிவபுராணம் பாடி இறைவனைத் தரிசித்தால் சிந்தையில் நினைத்த காரியங்கள் சிறப்பாக நிறைவேறும். வந்த துயரங்கள் வாயிலோடு நின்றுவிடும். எந்தக் குறைபாடாக இருந்தாலும் அதை அகற்றும் ஆற்றல் இறை வழிபாட்டிற்கு உண்டு. ஆனால் அதற்கு நம்பிக்கை மட்டுமே நமக்குத் தேவை.

    அந்த நம்பிக்கையை முழுமையாக நடராஜர் மீது வைக்க வேண்டிய மாதம் ஆனி மாதமாகும். நடராஜரை ‘தில்லை கூத்தன்’ என்றும், ‘ஆடலரசன்’ என்றும் ‘கூத்தபிரான்’ என்றும் அழைப்பது வழக்கம். ஆடிய பாதத்தோடு நீடிய கருணைகொண்டு வாழ்வை வளப்படுத்துபவர் நடராஜப் பெருமான். கலைகளைக் கற்று காசினியெங்கும் புகழ்பெற வேண்டுமென்று விரும்புபவர்கள், நடராஜப் பெருமானை முழுமையாக வழிபட வேண்டும்.

    அதற்கு உகந்த நாள் ஆனி மாதம் 6-ம் நாள். அதாவது 20-6-2018 (புதன்கிழமை) உத்திர நட்சத்திரத்தில் ஆனி உத்திர தரிசனமும், நடராஜர் அபிஷேகமும் நடைபெற இருக்கிறது. ஓடி ஓடி சம்பாதிக்கும் நமது வாழ்க்கையை, மற்றவர்கள் பார்த்து வியக் கும் விதத்தில் அமைத்துக் கொள்ள நடராஜர் தரிசனம் வழிகாட்டுகிறது.

    நடனக் கலையில் சிறந்து விளங்க வேண்டுமென்று விரும்புபவர்கள், நாடகம் மற்றும் கலைத்துறையில் பிரகாசிக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் நடராஜப் பெருமான் வழிபாட்டை முறையாக மேற்கொள்ள வேண்டும். சிவாலயங்களில் சிவகாமி அம்மன் சமேத நடராஜப் பெருமான், சிவன் சன்னிதிக்கு அருகிலேயே இருக்கும். முயலகனை வதம் செய்த கோலத்தோடு கால் தூக்கி ஆடும் அந்த இனிய காட்சியை நாம் கண்டு மகிழ வேண்டும். மிதுனத்தில் சூரியன் சஞ்சரிக்கும் ஆனி மாதத்தில் இந்த விழா நடைபெறுகின்றது.

    மிதுனம் நவக்கிரகங்களில் புதனுக்கு சொந்த வீடாகும். புதன் கல்விக்குரிய கிரகமாக கருதப்படுகிறது. எனவே கல்வி, கேள்விகளில் தேர்ச்சி பெற மாணவச் செல்வங்கள் இம்மாதத்தில் நடைபெறும் இதுபோன்ற விழாக்களில் கலந்துகொண்டு வழிபட்டால் முதன்மை பெற வழிவகுக்கும்.

    சிவராத்திரி அன்று சிவனை நாம் வழிபடும் போது இரவு முழுவதும் விழித்திருந்து சிவபுராணம் பாடி சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். ஆனால் ஆனி மாதத்திலும், மார்கழி மாதத்திலும் வரும் நடராஜர் தரிசனத்தைக் கண்டுகளிப்பவர்கள் பகல் முழுவதும் விரதம்இருந்து சிவனுக்குரிய அபிஷேக ஆராதனைகளைக் கண்டுகளிப்பதோடு நடராஜப் பெருமானையும் தரிசித்து அவர் சன்னிதியில் சிவபுராணம் பாடவேண்டும்.

    ‘திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பது பழமொழி. அந்த அடிப்படையில் நாம் இறைவன் சன்னிதியில் திருவாசகம் பாடினால் அவர் தரிசனம் நமக்கு கிடைப்பதோடு மட்டுமல்லாமல், கரிசனத்தோடு வந்து காட்சி கொடுத்து அருள் வழங்குவார் என்பது நம்பிக்கை.

    நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
    இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான்
    தாள்வாழ்க!
    கோகழி ஆண்ட குறு மனிதன் தாள்வாழ்க!
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க!
    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!

    என்று இறைவனைநாம் வாழ்த்திப் பாடினால் நாமும் நன்றாக வாழ்வோம், நம்மைச் சார்ந்தவர்களும் நன்றாக வாழ்வார்கள். நாம் வாழ்வாங்கு வாழ வாழ்வை வெல்ல, வெற்றிகளைக் குவிக்க சிவன் சேவடியைப் போற்றிவணங்க வேண்டுமென்று மாணிக்கவாசகர் எடுத்துரைக்கின்றார். அல்லல் பிறவியறுப்பவனை, சொல்லற்கு அரியனை, தில்லையுள் கூத்தனை, தென்பாண்டி நாட்டானை நள்ளிரவில் நட்டம் பயின்றாடும் நாதனை, ஆனி உத்திரத்தன்று வழிபட்டால் தேனினும் இனிய வாழ்க்கை அமையும்.

    அன்றைய தினம் சிவபிரானுக்கு நடைபெறும் அபிஷேகத்தில், பால் அபிஷேகம் பார்த்தால் நான்கு திசைகளில் இருந்தும் நல்ல தகவல் வந்துகொண்டே இருக்கும். பன்னீர் அபிஷேகம் பார்த்தால் எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும். எனவே அந்த அற்புத தரிசனம் தரும் ஆனி மாதம் ஒரு அபூர்வ மாதமாகும். அகிலத்து மாந்தர்களுக்கு அனைத்து நலன்களையும் தரும் வழிபாட்டிற்குரிய மாதம் இதுவாகும். மனிதப்பிறவி எடுத்ததன் பயனே இறைவனுடைய அழகை கண்ணார காண்பதற்காகவே என்கிறார்கள் சான்றோர்கள். அந்த இறைவன் தரிசனம் தரும் நாளில் நாம் உள்ளன்போடு வழிபட்டு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.

    -“ஜோதிடக்கலைமணி” சிவல்புரிசிங்காரம்.
    ×