search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவிநாசி கோவில்"

    • பொதுமக்கள் அனைத்து சுகங்களும் பெற்று நலமுடன் வாழ வேண்டும்.
    • பக்தா்கள் பங்கேற்று அவிநாசி பதிகம் பாடினா்.

    அவிநாசி :

    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டியும், பொதுமக்கள் அனைத்து சுகங்களும் பெற்று நலமுடன் வாழ வேண்டியும் 10,008 முறை அவிநாசி பதிகம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் சிவாச்சாரியாா் ஆரூா் சுப்பிரமணியம், சிவன்மலை சந்திரசேகரன் ,பழனி ,விக்னேஷ், அமுத கணேசன், தாரமங்கலம் முத்துகிருஷ்ணன் உள்பட பல்வேறு பகுதிகளை சோ்ந்த சிவனடியாா்கள், பக்தா்கள் பங்கேற்று அவிநாசி பதிகம் பாடினா். 

    • தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பு பெற்றது இந்தக் கோவில் தேர்.
    • ஷெட்டை பிரிக்கும் பணிகள் கடந்த இரு நாட்களாக நடந்தது.

    அவிநாசி :

    அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத் தேரோட்டம் வருகிற 25ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பு பெற்றது இந்தக் கோவில் தேர். கோவில் வளாகத்தில் தகர ஷெட்டால் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ள தேரை தயார்படுத்து வதற்காக ஷெட்டை பிரிக்கும் பணிகள் கடந்த இரு நாட்களாக நடந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் தேர் விழாவிற்கான முகூர்த்த ஆயக்கால் பூஜை நடந்தது.

    செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் கூறிய போது,தொடர்ந்து தேரை தயார்படுத்தி அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெறும் என்றார்.

    • ராஜராஜ சோழனின்,1037ம் ஐப்பசி சதய திருவிழாவை முன்னிட்டு தேவார திருப்பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டது.
    • 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    அவிநாசி :

    அவிநாசி கோவிலில் தேவாரத்தை மீட்டெடுத்த திருமுறை கண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின், 1037ம் ஐப்பசி சதய திருவிழாவை முன்னிட்டு தேவார திருப்பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டது.

    அவிநாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த விழாவில், தேவார திருப்பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டது. பழநி சண்முகசுந்தர தேசிகர் மற்றும் கரூர் குமார சாமிநாத தேசிகர் தலைமையில், ஓதுவா மூர்த்திகள் பங்கேற்று தேவாரம், திருமுறை விண்ணப்பம் செய்தனர்.

    முன்னதாக கோவில் உள்பிரகாரத்தில் உள்ள, 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. அவிநாசி கோவிலை சேர்ந்த ஆரூர சுப்ரமண்ய சிவாச்சார்யார், நானிலம் போற்றும் நால்வரின் பெருமைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

    சிவக்குமார் சிவாச்சார்யார் தலைமையில், பூஜைகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் தலைமையில் , கோவில் ஓதுவாமூர்த்தி சிவசங்கர் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    • 16 மாணவிகள் பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்தனர்.
    • பரதநாட்டியத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு பல்கலை தேர்வு நடத்தப்பட்டு பட்டம் வழங்கப்படுகிறது என்றார்.

    அவிநாசி  :

    அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் கலையரங்கத்தில் சதங்கையணி பூஜை நடைபெற்றது.இதில், 16 மாணவிகள் பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்தனர்.

    ஆசிரியை தேவிகா கூறுகையில், ஆண்டுதோறும் பரதநாட்டியத்தில் சான்றிதழ், பட்டய, மற்றும் பட்டப் மேற்படிப்புகளுக்கு பாடங்கள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பல்கலை தேர்வு நடத்தப்பட்டு பட்டம் வழங்கப்படுகிறது என்றார்.விழாவில் பரதநாட்டிய மாணவிகள் மற்றும் பெற்றோர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    ×