search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசுத்துறை"

    • சென்னை கோட்டை நோக்கி பேரணிக்கு செல்ல உள்ளனர்.
    • அனைத்து அரசு ஊர்தி ஓட்டுநர்களும் இதில் பங்கேற்க வேண்டும்.

    சென்னிமலை,

    ஈரோடு மாவட்ட அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்க மாவட்ட செயலாளர் சென்னிமலை சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுத்துறை பல்வேறு துறைகளில் பணிபுரியும் 7000 அரசுத்துறை ஓட்டுநர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22-ந் தேதி திங்கட்கிழமை ஒருநாள் விடுப்பு எடுத்து சென்னை கோட்டை நோக்கி பேரணிக்கு செல்ல உள்ளனர்.

    அரசுத்துறையில் பணிபுரியும் ஓட்டுனர்களுக்கு ஊதியம் முரண்பாடு, கல்வித் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு, கழிவு நீக்கம் செய்யப்பட்ட வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்கள் அரசு வழங்க வேண்டும், காலியாக உள்ள ஓட்டுனர்கள் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் வேலைவாய்ப்பு துறை மூலம் நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்,

    ஈரோடு மாவட்டத்தில் வேளாண்துறையில் காலியாக உள்ள 35 க்கும் மேற்பட்ட ஓட்டுனர் பணியிடங்களை நிரப்புதல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் 15 ஓட்டுநர் பணியிடங்கள் வருவாய் துறையில் 10 க்கும் மேற்பட்ட ஓட்டுனர் பணியிடங்கள், மருத்துவத்துறையில் 20 ஓட்டுனர் பணியிடங்கள்,

    இதே போல் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஓட்டுனர்கள் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி சென்னையில் வருகிற திங்கட்கிழமை நடைபெறும் பேரணிக்கு ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் அன்று விடுப்பு எடுத்து சென்னை செல்கின்றனர்.

    அனைத்து அரசு ஊர்தி ஓட்டுநர்களும் இதில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×