search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் நிலோபர் கபில்"

    அயனாவரம் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு ரூ.73 லட்சம் செலவில் நவீன மருத்துவ சிகிச்சை கருவிகள் வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்த அமைச்சர் நிலோபர் கபில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை வருமாறு:-

    பணியின் போது விபத்து ஏற்பட்டு பணியிடத்தில் மரணம் அடையும் கட்டுமான தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.5 லட்சம் உதவித் தொகை, பணியின் போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைபவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும்.

    அயனாவரம் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு ரூ.13 லட்சம் செலவில் மூக்கு, தொண்டையை கேமரா மூலம் கண்காணித்து அறுவை சிகிச்சை செய்ய ரிஜிட், நாசல், எண்டோஸ் கோப், கேமரா, டி.வி. யூனிட்டுடன் வழங்கப்படும்.


    இந்த ஆஸ்பத்திரிக்கு ரூ.60 லட்சம் செலவில் ஆர்த்தோஸ்கோப் (மூட்டு அறுவை சிகிச்சை) வழங்கப்படும். இவை மதுரை, சேலம் ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்படும். ரூ.1.93 கோடி செலவில் எளிய முறையில் தொழிலாளர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அயனாவரம், மதுரை, சிவகாசியில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு லேப்ராஸ்கோப் கருவிகள் வழங்கப்படும்.

    தமிழ்நாட்டில் உள்ள அரசு ஐ.டி.ஐ.க்களில் பயிற்சியாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதற்காக 88 பணியமர்த்தும் பயிற்சி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர் பணிக்காலத்தில் இறக்க நேர்ந்தால் வழங்கப்படும் ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ.2,000 லிருந்து ரூ5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

    18 மாவட்டங்களில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு பிரிவுகள் உருவாக்கப்படும்.

    இணையதளம் வாயிலாக தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய தொழிற்தேர்வு நடத்தப்படும்.

    தொழிற்பயிற்சி நிலையங்களுக்கிடையே மண்டல மற்றும் மாநில விளையாட்டு போட்டிகள் மாநில அரசின் பங்களிப்புடன் நடத்தப்படும்.

    அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் அழைப்பின் பேரில் சேவை பொதுமக்களுக்கு வழங்கிட கைபேசி செயலி உருவாக்கப்படும்.

    அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் பயிற்சியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

    தமிழகத்தில் உள்ள மதுரை, சேலம், வேலூர், திருச்சி, ஓசூர், சிவகாசி ஆகிய 6 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளுக்கு புறஒலி கருவி வழங்கப்படும்.

    7 புதிய அவசர மருத்துவ ஊர்திகள் மற்றும் 4 மருந்து இடம் மாற்றும் ஊர்திகள் வழங்கப்படும்.

    தமிழகத்தில் உள்ள சேலம், வேலூர், திருச்சி, ஓசூர், சிவகாசி ஆகிய 5 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவ மனைகளுக்கு முழுவதும் தானியங்கி அனலைசர் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #TNMinister #Niloferkafeel
    ×