search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைக்கும் பணி தீவிரம்"

    • பழைய சந்தையில் ஜவுளி கடை வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
    • அந்த இடத்தை மாநகராட்சி சார்பில் அளவீடு செய்யும் பணி நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ரூ.54 கோடி மதிப்பில் 4 தளத்துடன் கூடிய 292 கடைகள் அடங்கிய புதிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

    ஆனால் இதில் கனி மார்க்கெட் வியாபாரி களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்யாமல் பொது ஏலத்தில் தான் கடைகள் வழங்கப்படும் என மாநகராட்சி அறிவி த்தது. இதனால் புதிய வணிக வளாகம் கடைகள் ஏலம் போகாமல் தொட ர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

    இந்நிலையில் கனி மார்க்கெட் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கருதி மாநகராட்சியின் சார்பில் தற்காலிக கடை அமைத்து கொடுக்கப்பட்டது. தற்போது புதிய வணிக வளாகம் அருகே உள்ள கடைகளை காலி செய்து புதிய வணிக வளாக கடைகளை ஏலத்தில் விட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதற்காக மாநகராட்சி அதிகாரிகள் ஜவுளி வியாபாரிகள் கடைகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கினர். இதனால் ஜவுளி வியாபாரிகள் அமைச்சர் முத்துசாமியை சந்தித்து முறையிட்டனர்.

    இதையடுத்து ஜவுளி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஈரோடு நாச்சிப்பா வீதியில் உள்ள சின்ன மார்க்கெட் பகுதியில் கடைகளில் ஒதுக்கீடு செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது.

    மேலும் சின்ன மார்க்கெ ட்டில் வியாபாரம் செய்யும் கடைக்காரர்களுக்கு எதிரே உள்ள காலி இடத்தில் கடை வைத்து கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் இதற்கு சின்ன மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் சந்தித்து முறையிட்டனர். 2 தரப்பு நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து அமைச்சர் முத்துசாமி பேசினார்.

    இதில் ஜவுளி வியாபாரிகளுக்கு கனி மார்க்கெட் அருகே உள்ள மகிமாலீஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள பழைய சந்தையில் ஜவுளி கடை வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தை மாநகராட்சி சார்பில் அளவீடு செய்யும் பணி நடந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று மாநகராட்சி சார்பில் அந்த இடத்தில் 120 ஜவுளி க்க டைகள் அமைப்பதற்கான தகர செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்று முடிந்ததும் நாளை முதல் அங்கு கனி மார்க்கெட் செயல்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • 5,431 தெரு விளக்குகள் புதியதாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
    • இதற்காக ரூ.15.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. 60 வார்டுகளுக்குட்பட்ட முக்கிய சாலைகள், வீதிகள் என மாநகராட்சியில் தற்போது 23,721 எல்.ஈ.டி தெருவிளக்குகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.

    இந்த தெரு விளக்குகள் அனைத்தும் 2,229 தானி யங்கி கட்டு ப்பாடு கருவி களுடன் இணைக்கப்பட்டு தினசரி இயக்கப்பட்டு வருகின்றது.

    இந்த தெருவிளக்குகளின் செயல்பாடுகள் முழுமை யாக இணையதளம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதனால் தெரு விளக்கு பழுதுகள் அனை த்தும் புகார் கிடைத்த சில நாட்களிலேயே சரி செய்யப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில் மாநகரா ட்சி விரிவாக்கம் செய்ய ப்பட்ட பகுதிகளில் புதியதாக 5,431 தெருவிளக்குகள் அமைக்கும் பணி நடை பெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 15-வது மத்திய நிதிக்குழு நிதியின் கீழ் ஒதுக்கப்பட்டு ள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

    ஈரோடு நகராட்சியாக இருந்து கடந்த 2008-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து அருகாமையில் இருந்த பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

    விரிவாக்கம் செய்ய ப்பட்ட பகுதிகளில் அடிப்ப டை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருந்து வந்ததையடுத்து முன்னுரிமை அடிப்படை யில் விரிவாக்கம் செய்ய ப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர், சாலைகள், தெரு விளக்கு உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

    அந்த வகையில் ஏற்கனவே மாநகராட்சியில் 23 ஆயிரத்து 721 தெரு விளக்குகள் உள்ள நிலையில் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் கூடுதலாக 5,431 தெரு விளக்குகள் புதியதாக அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்காக ரூ.15.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது.

    இந்த புதிய தெரு விளக்குகள் அனைத்தும் மாநகரின் புறநகர் பகுதி களில் அமைக்கப்பட உள்ளது. மின் கட்டணத்தை குறைப்பதற்காக எல்.ஈ.டி. தெருவிளக்குகள் பொரு த்தப்பட உள்ளது.

    புதியதாக பொருத்தப்பட உள்ள தெரு விளக்குகளின் கட்டுப்பாடு கருவிகள் அனைத்தும் இணைதளத்துடன் இணை க்கப்பட உள்ளதால் இயக்குவதில் எவ்வித சிரமமும் ஏற்படாது.

    மேலும் பராமரிப்பு, பழுது தொடர்பான புகார்க ளையும் எளிதில் கையாள முடியும். ஈரோடு சத்தி சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் ஈரோடு பஸ் நிறுத்ததில் இருந்து சித்தோடு வரை சாலையின் மையப்பகு தியில் புதியதாக தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

    விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இது தவிர புதியதாக உருவான குடி யிருப்பு பகுதிகளிலும் தெருவிளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகி ன்றது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கிராமத்தில் ரூ.1.20 லட்சம் செலவில் 6,800 சதுர அடி பரப்பளவில் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.
    • மேலும் பட்டாம்பூச்சி பூங்காவிற்கு அருகிலேயே ரூ.4.68 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குள்ளம்பாளையம் கிராமத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமம் ஏற்கனவே திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் இந்த கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தனித்தனியாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு குடிநீர் தேவையில் தன்னிறைவு பெற்ற கிராமமாக விளங்கி வருகிறது.

    இந்த கிராமத்தில் ரூ.1.20 லட்சம் செலவில் 6,800 சதுர அடி பரப்பளவில் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.

    மேலும் பட்டாம்பூச்சி பூங்காவை சுற்றிலும் 147 மீட்டர் தொலைவிற்கு கம்பி வேலி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்டாம்பூச்சிகளை ஈர்க்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான செடிகள் பூங்காவில் நடப்பட உள்ளது.

    மேலும் பட்டாம்பூச்சி பூங்காவிற்கு அருகிலேயே ரூ.4.68 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த 2 பூங்காக்களின் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பணி கள் விரைவில் முடிக்க ப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரி வித்தனர்.

    ×