search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபாய நிலை"

    • 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • அறுவடைக்கு தயாரான மற்றும் அறுவடை செய்த நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமாகும் அபாய நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளான திருமருகல், மேலப்பூதனூர், திருப்புகலூர், அம்பல், பொறக்குடி, திருப் பயத்தங்குடி, விற்குடி, வாழ்குடி, போலகம், ஆலத்தூர் உள்ளிட்ட பகுதி களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகவும், ஒரு சில பகுதிகளில்அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமா கவும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடிக்கடி திடீரென கனமழை பெய்வ தால் அறுவடைக்கு தயாரான மற்றும் அறுவடை செய்த நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமாகும் அபாய நிலை உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு திருமருகல் ஒன்றியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×