search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்புச்செழியன்"

    • வருமான வரித்துறையினர் சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர்கள் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
    • தயாரிப்பாளர்கள் அன்புசெழியன், கலைப்புலி எஸ். தாணு உள்ளிட்ட பலரின் வீட்டில் சோதனை நடைப்பெற்றது.

    சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. மதுரையில் 30 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. மேலும் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஞானவேல்ராஜா ஆகியோரது அலுவலகங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.

     

    இந்நிலையில் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளது. 40 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.26 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ரூ.3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்படங்களை வெளியிட்டு வருபவர் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன்.
    • வருமானவரித்துறையினர் இன்று அன்புச்செழியன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    தமிழ் சினிமா துறையில் பிரபல பைனான்சியராக வலம் வருபவர் அன்புச்செழியன். இவரது வீடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது. இந்நிலையில், அன்புச்செழியன் வீட்டிற்கு இன்று அதிகாலை 5 மணிக்கு வந்த வருமான வரித்துறையினர் அங்கு அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    அன்புச்செழியன்

    அன்புச்செழியன்

     

    மேலும் சென்னை, மதுரையில் அன்புச்செழியனுக்கு தொடர்புடைய இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையை சேர்ந்த அன்புச்செழியன் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

    கடந்த 2020-ம் ஆண்டும் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×