search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அந்தோணியார் ஆலயம்"

    • உறுதி பூசுதல் விழாவுக்கு பாளை மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமை தாங்கினார்.
    • விழாவில் சிறுவர், சிறுமிகளுக்கு உறுதி பூசுதல் அருளடையாளம் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் நெல்லை - தென்காசி சாலையில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் உறுதிபூசுதல் விழா கொண்டாடப்பட்டது. பாளை மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமை தாங்கி புது நன்மை எடுத்த 75 சிறுவர், சிறுமிகளுக்கு உறுதி பூசுதல் அருளடையாளம் வழங்கப்பட்டு திருப்பலி நிறை வேற்றப்பட்டது .ஏற்பாடுகளை பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலய பங்கு தந்தை ஜேம்ஸ் அடிகளார் மற்றும் இறை மக்கள் செய்திருந்தனர். இதில் உறுதி பூசுதல் பெற்ற சிறுவர், சிறுமிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரை கரிமேடு அந்தோணியார் ஆலய தேர்பவனி நடந்தது.
    • நாளை அன்னதானம் நடக்கிறது.

    மதுரை

    மதுரை கரிமேடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று நடந்தது.

    மாலையில் ஆலய பங்குத்தந்தை ஜோசப் தலைமையில் உதவி பங்குத் தந்தை சின்னதுறை, டி.நோபிலி பள்ளி முதல்வர் அருட்தந்தை அடைக்கல ராஜா, துணை முதல்வர் அருட்தந்தை ஆனந்த், மதுரை உயர்மறை மாவட்ட பணிக்குழுக்களின் செயலர் அருட்தந்தை சந்தியாகு ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினர்.

    பின்னர் திருப்பலி முடிந்ததும் புனித அந்தோ ணியார் உருவம் தாங்கிய மின் அலங்கார தேர் பவனி நடந்தது. கரிமேடு மார்க்கெட், புதுச்சிறை வீதி, மேலப் பொன்னகரம் முக்கிய வீதி, ராஜேந்திரா மெயின் ரோடு, ஆரப்பா ளையம், ஞான ஒளிவுபுரம் வழியாக மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.

    இன்று மாலை 6.30 மணிக்கு நன்றி திருப்பலி நிறைவேற்றப்படும். அதன் பின்னர் கொடியிறக்கப் பட்டு திருவிழா நிறைவு பெறும். நாளை அன்னதானம் நடக்கிறது.

    ×