search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அந்தியூர் சந்தை"

    • பொங்கல் பண்டிகையையொட்டி இப்போது அந்தியூர் சந்தை களை கட்ட தொடங்கி விட்டது.
    • சந்தைகளில் மாட்டுப்பொங்கலுக்கு தேவையான பொருட்களை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம். அந்தியூர் வாரச்சந்தை அந்தியூர் பஸ் நிலையம் அருகே 8 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. தற்போது அந்த பகுதியில் தாலுகா அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், கருவூலம் உள்ளிட்ட அரசு அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. இதனால் தற்போது அந்தியூர் சந்தை 3.5 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்த வாரச் சந்தை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கால்நடை சந்தைகளும், திங்கட்கிழமை வார சந்தையும் நடந்து வருகிறது. இந்த வார சந்தையில் வணிகப் பொருட்கள் (மளிகை) மற்றும் காய்கறி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளான சின்னத்தம்பி பாளையம், வெள்ளை யம்பாளையம் தவிட்டு பாளையம், அண்ணாமடுவு, கந்தம்பாளையம், காட்டூர், செம்புளி சாம்பாளை யம், கள்ளிமடை குட்டை, புதுக்காடு, காந்திநகர், பர்கூர் மலை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விளைபொருட்களை விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.

    இந்த நிலையில் வருகின்ற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 16-ந் தேதி மாட்டுப்பொங்கல் வருவதையொட்டி புகழ்பெற்ற அந்தியூர் மாட்டுச்சந்தையில் மாடுகள் விற்பனை மற்றும் மாடு களுக்கு தேவையான கயிறு, கொம்புகளுக்கு வர்ணம் பூசும் வண்ண கலர்கள், பெயி ண்ட்டு வகைகள் உள்பட பல்வேறு பொருட்களும் இன்று அதிகளவில் விற்ப னைக்கு வியாபாரிகள் கொண்டு வந்து இருந்தனர்.

    இதையடுத்து விவசாயிகளும், வியாபாரிகளும் அந்தியூர் சந்தைக்கு இன்று அதிகளவில் வந்திரு ந்தனர். தொடர்ந்து அவர்கள் மாடுகளுக்கு தேவையான வண்ண கயிறு மற்றும் கலர் பொடிகளை ஆர்வத்து டன் வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர்.

    கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் மாடுகள் வரத்து அதிக அளவில் இருந்தது. இதனை வாங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் ஈரோடு, மேட்டூர், சத்தியமங்கலம், கோபி, கேரள மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச் சென்றனர்.

    இதனால் வாரச்சந்தையில் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி இப்போது அந்தியூர் சந்தை களை கட்ட தொடங்கி விட்டது.

    இதேபோல் மாவட்ட த்தின் பல பகுதிகளில் உள்ள சந்தைகளில் மாட்டுப்பொங்கலுக்கு தேவையான பொருட்களை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    ×