search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக தலைவர்"

    அ.தி.மு.க.வில் தலைவராக ரஜினிக்கு இடமில்லை. யாராக இருந்தாலும் அ.தி.மு.க.வில் தொண்டர்களாகி படிப்படியாகத்தான் முன்னேற முடியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். #ministersellurraju #Rajini

    மதுரை:

    அ.தி.மு.க. இளைஞர் பாசறை சார்பில் மதுரை முனிச்சாலையில் இன்று புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஏராளமான இளைஞர்கள் புதிய உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:-

    இளைஞர்களுக்கு அவர்களது உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கொடுக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். இன்றைக்கு புதிய உறுப்பினர்களாக சேரும் இளைஞர்கள் கூட தகுதியும், திறமையும் இருந்தால் வருகிற உள்ளாட்சி தேர்தலில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும்.

    அதற்காக கட்சியின் தலைமையிடத்தில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பரிந்துரை செய்யப்படும்.

    தமிழகம் முழுவதும் ரேசன் கடை ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அதிகாரிகள் உரிய பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டத்தை வாபஸ் பெறவில்லை.


    ஊழியர்களின் போராட்டத்தால் நாளை ரேசன் கடை பொருட்கள் வினியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பரங்குன்றம் தொகுதி என்றைக்கும் அ.தி. மு.க.வின் கோட்டை ஆகும். அங்கு எப்போது தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. வெற்றிபெறும்.

    அ.தி.மு.க.வில் தலைவராக ரஜினிக்கு இடமில்லை. யாராக இருந்தாலும் அ.தி.மு.க.வில் தொண்டர்களாகி படிப்படியாகத்தான் முன்னேற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் துரைப் பாண்டியன், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், கலைச்செல்வம், முனிச்சாலை சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #ministersellurraju #Rajini

    ×