search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிநவீன எந்திரங்கள்"

    • நாடு முழுவதும் ரெயில்வே தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
    • ரெயில்கள் செல்லும் போது தண்டவாளம் உள்ளிழுத்து அசைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

    திருப்பூர் :

    ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தை தொடர்ந்து நாடு முழுவதும் ரெயில்வே தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல்திருப்பூர் - ஊத்துக்குளி ரெயில் வழித்தடத்தில், தண்டவாளங்களை தாங்கி பிடிக்கும், கான்கிரீட் சிலாப்புகளின் கீழ் ஜல்லிக்கற்கள் நிரப்பும் பணி நேற்று துவங்கியது.அதிநவீன பிளஸ்சர் எந்திரம் தண்டவாளங்களை அலாக்காக தூக்கி சிலாப் கற்களை தாங்கி பிடிக்க, எந்திரங்கள் சிலாப் கற்களுக்கு கீழ் ஜல்லிகளை நிரப்பின. ரெயில் தண்டவாளத்தில் சிலாப் கற்களின் கீழ் நிரப்பப்படும் ஜல்லிக்கற்கள் தொடர்ந்து இயங்கும் ரெயில்கள் அழுத்தம் காரணமாக குறிப்பிட்ட நாட்களில் உடைந்து பொடியாகி விடும்.

    ரெயில்கள் செல்லும் போது தண்டவாளம் உள்ளிழுத்து அசைவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பாதுகாப்பை உறுதி செய்ய புதியதாக பெரிய ஜல்லிகற்கள் சிலாப் கற்களுக்கு கீழ் நிரப்பப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×