search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடையாள‌ அட்டை"

    • 247 பேர் தேர்வு செய்யப்பட்டனர்
    • கலெக்டர் வழங்கினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் 380 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் 247 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்வு செய்யப்பட்ட 247 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டைகளை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.

    மேலும் 162 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்கான பதிவும், 30 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைக்கான பதிவும் மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் மாற்றுத்திறனாளி களுக்கான மாதாந்திர உதவித் தொகை வேண்டி 13 பேரும், வங்கிக் கடனுதவி வேண்டி 22 பேரும்,வேலைவாய்ப்பு வேண்டி 32 பேரும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 12 பேரும் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

    மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார்உள்பட மருத்துவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நல அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×