search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடையாளம் தெரியாத வாகனம்"

    • வெள்ள வேட்டி அணிந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தார்.
    • கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மா வட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி எலவனாசூர்கோட்டை போலீஸ் சராகத்துக்குட்பட்ட விநாயகா பள்ளி எதிரில் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள வேட்டி அணிந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன், தனிப்பிரிவு காவலர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தேடி வருகிறனர்.

    • வெங்கடேசன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பெரிய குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது22 ). இவர் சொந்த வேலை காரணமாக விழுப்புரம் சென்று விட்டு கெடிலம் எஸ்.எஸ்.வி பள்ளி வளாகம் வளைவில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி வெங்கடேசன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தகவல றிந்த திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தனி பிரிவு காவலர் மனோகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அனுப்பி வைக்கப்பட்டு விபத்து ஏற்படுத்த வாகனத்தை தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகிறார்கள். 

    • துக்க நிகழ்வுக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த மாமண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 21). இவரது நண்பர் கணேசன். இவர்கள் இருவரும் பக்கத்து ஊரில் இறப்பு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தனர்.

    பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக பைக்கில் மாமண்டூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது காஞ்சிபுரம் வந்தவாசி சாலை அருகே வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் திருநாவுக்கரசு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கணேஷ் படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து விரைந்து வந்த தூசி போலீசார் வழக்கு பதிவு செய்து திருநாவுக்கரசு உடலை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×