வாகனம் மோதி வாலிபர் சாவு

துக்க நிகழ்வுக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்போலீசார் விசாரணை
வாகனம் மோதி வாலிபர் சாவு
Published on

வெம்பாக்கம்:

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த மாமண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 21). இவரது நண்பர் கணேசன். இவர்கள் இருவரும் பக்கத்து ஊரில் இறப்பு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தனர்.

பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக பைக்கில் மாமண்டூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது காஞ்சிபுரம் வந்தவாசி சாலை அருகே வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் திருநாவுக்கரசு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கணேஷ் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து விரைந்து வந்த தூசி போலீசார் வழக்கு பதிவு செய்து திருநாவுக்கரசு உடலை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com