search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடித்துக் கொலை"

    • மனைவி உடலுறவுக்கு மறுத்ததால் தகராறு
    • மகன் வெறிச்செயல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், சு.பள்ளிப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கீழ் குரும்பர் தெருவை சேர்ந்தவர் ஜெயபால்( வயது 42). இவரது மனைவி சிவகாமி (34) , உமேஷ்(20) மகன், சுகன்யா(19) மகள் உள்ளனர். ஜெயபால் கட்டிட மேஸ்திரியாக பெங்களூரில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு ஜெயபால் பெங்களூரில் இருந்து தனது வீட்டிற்கு வந்தார். அப்போது ஜெயபால் மனைவியை உடலுறவிற்கு அழைத்துள்ளார். இதற்கு சிவகாமி மறுத்துள்ளார். அப்போது கணவன் - மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ஜெயபால், மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி சரமாரியாக தாக்கினார்.

    இதனை பார்த்த அவரது மகன் உமேஷ், அருகில் இருந்த கட்டையை எடுத்து ஜெயபாலின் தலையின் பின்பக்கம் ஓங்கி அடித்தார். இதில் மயங்கி விழுந்த அவர், சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து உமேஷ் மற்றும் சிவகாமியை படித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×