search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜய் சிங் சவுதாலா"

    வாரிசு சண்டையால் அதிருப்தி அடைந்த ஓம் பிரகாஷ் சவுதாலா சிறையில் இருந்தவாறே அஜய் சிங் சவுதாலாவையும் கட்சியில் இருந்து நீக்கி நேற்று உத்தரவிட்டார். #OmPrakashChautala #AjaySinghChautala
    சண்டிகார்:

    இந்திய தேசிய லோக்தளம் கட்சி தலைவரும், அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான ஓம் பிரகாஷ் சவுதாலா ஆட்சியில் இருந்த போது ஆசிரியர் பணி நியமன மோசடி வழக்கில் சிறை தண்டனை பெற்றார். அவருடைய மூத்த மகன் அஜய் சிங் சவுதாலாவும் இந்த வழக்கில் சிக்கினார். இருவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதையடுத்து ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இளைய மகன் அபே சவுதாலா எதிர்க்கட்சி தலைவராக இருந்து கட்சியை நிர்வகித்து வருகிறார். ஆனால் அவருடைய தலைமையை எதிர்த்து அஜய் சிங் சவுதாலாவின் மகன்களான துஷ்யந்த் சவுதாலா எம்.பி., திக்விஜய் சவுதாலா ஆகியோர் போர்க்கொடி உயர்த்தினர். இதனால் ஓம் பிரகாஷ் சவுதாலா சிறையில் இருந்தபடியே அஜய் சிங் சவுதாலாவின் 2 மகன்களையும் கட்சியில் இருந்து 2-ந்தேதி நீக்கினார்.



    இந்நிலையில் சிறையில் இருந்து பரோலில் வந்த அஜய் சிங் சவுதாலா, தன் மகன்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். மேலும் 17-ந் தேதி இந்திய தேசிய லோக்தளம் கட்சி அறிவித்துள்ள செயற்குழு கூட்டத்துக்கு எதிராக போட்டி கூட்டத்துக்கு அஜய் சிங் சவுதாலா அழைப்பு விடுத்தார். வாரிசு சண்டையால் அதிருப்தி அடைந்த ஓம் பிரகாஷ் சவுதாலா சிறையில் இருந்தவாறே அஜய் சிங் சவுதாலாவையும் கட்சியில் இருந்து நீக்கி நேற்று உத்தரவிட்டார். 
    ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் அஜய் சிங் சவுதாலா தேர்வு எழுதுவதற்காக பரோலில் சென்று வர டெல்லி ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளது. #AjayChautala
    புதுடெல்லி:

    அரியானா மாநிலத்தில் கடந்த 2000ம் ஆண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ததில் ஊழல் செய்தது தொடர்பாக இந்திய தேசிய லோக் தள் தலைவர் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 53 பேர் மீது குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதில், அஜய் சிங் சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வருகிறார். 

    இந்நிலையில், சிறையில் இருந்தபடியே தொலைதூரக் கல்வி மூலம் முதுநிலை டிப்ளமோ படித்து வரும் அஜய் சிங் சவுதலா தேர்வு எழுதுவதற்காக பரோலில் சென்று வருகிறார்.

    அவ்வகையில், நாளை நடைபெற உள்ள தேர்வை எழுதுவதற்காக பரோலில் அரியானா செல்ல அனுமதி கேட்டு அஜய் சிங் சவுதாலா சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரியானா மாநிலம் சிர்சாவில், நாளை பிற்பகல் பி.ஜி. டிப்ளமோ தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி வினோத் கோயல், தேர்வு எழுதுவதற்காக அஜய் சவுதாலாவுக்கு பரோல் வழங்கி உத்தரவிட்டார். இன்று சவுதாலாவை சிறையில் இருந்து பரோலில் விடுவிக்க வேண்டும் என்றும், ஜூலை 1-ம் தேதி அவர் சரண் அடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். #AjayChautala
    ×