என் மலர்
நீங்கள் தேடியது "World Maritime Day"
- திருச்செந்தூர் பைரவர் கோவில் கடற்கரையில் உலக கடல் தினம் கொண்டாடப்பட்டது.
- கடற்கரையில் இருந்த நெகிழி பைகள், குப்பைகள் அகற்றப்பட்டது.
திருச்செந்தூர்:
கடல்சார் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக திருச்செந்தூர் நகராட்சி சார்பில் திருச்செந்தூர் பைரவர் கோவில் கடற்கரையில் உலக கடல் தினம் கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர் சிவஆனந்தி தலைமையில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி மற்றும் உறுதிமொழி எடுத்தல் நடைபெற்றது.
தொடர்ந்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்ல பாண்டியன் தலைமையில் தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்டோர் கடற்கரையில் இருந்த நெகிழி பைகள் மற்றும் குப்பைகளை சேகரித்து தூய்மைப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் நகராட்சி துணைத்தலைவர் ஏ.பி. ரமேஷ், நகராட்சி உறுப்பினர்கள் அந்தோணிட்ரூமன், மகேந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் வாள் சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.






