search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Workers Demonstration"

    • மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர் சங்கம் சார்பில் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு ரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரை அளவை கண்டறிய ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    நெல்லை:

    மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர் சங்கம் சார்பில் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சங்கதலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனுகொடுத்தனர். அதில் அவர் கூறியிருப்பதாது:-

    கடந்த 2017-ம் ஆண்டு தொற்றா நோய் மருத்துவ பிரிவில் நாங்கள் நியமனம் செய்யப்பட்டோம். பின்னர் மக்களை தேடி மருத்துவத்திற்கு மாற்றப்பட்டோம். எங்களுக்கு கூடுதலாக பணி வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு ஊதிய உயர்வோ, ஊக்கத்தொகையோ வழங்கப்படவில்லை. தினமும் 20 வீடுகளில் எங்களை ஆய்வு செய்ய கூடுதல் பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3,500 வழங்கப்படும் எனவும், பொதுமக்களுக்கு ரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரை அளவை கண்டறிய ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    ஆனால் இதுவரை அது வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மாதம் தவறாமல் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் (ஏ.ஐ.சி.யூ.டி.) சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    மாதம் தவறாமல் சம்பளம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள 43 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

    தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். முடக்கம் செய்யப்பட்டுள்ள பிரிவுகளை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முழு நேர மேலாண் இயக்குனரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் (ஏ.ஐ.சி.யூ.டி.) சார்பில் பாசிக் தலைமை அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். பொருளாளர் தரணிராஜன், துணைத் தலைவர்கள் முத்து நாயுடு, பாலமுருகன், துணை செயலாளர்கள் கோவிந்த ராசு, மூர்த்தி, இருசப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஏ.ஐ.சி.யூ.டி. தலைவர் அபிஷேகம், பொதுச் செயலாளர் தினேஷ் பொன்னையா, செயலாளர் சேது செல்வம், துணைத் தலைவர் அப்துல்லா கான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.

    ×