search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wine-meat"

    • காந்தி மியூசியத்தில் சமூக விரோதிகள் மது-,இறைச்சி சாப்பிடுவதாக பா.ஜ.க.வினர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.
    • கல்வெட்டுகளின் எழுத்தும் அழிந்து பொலி விழந்து காணப்படுகிறது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா. சுசீந்திரன், நிர்வாகிகள் சீமான்சரவணன், முத்துக்குமார் ஆகியோர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரை காந்தி மியூசியத்திற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

    இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தந்த காந்தியடிகள், 'மது அருந்தக்கூடாது, மாமிசம் சாப்பிடக்கூடாது" என்று போதித்தார். ஆனால் காந்தி மியூசிய வளாகத்திற்குள் சமூக விரோதிகள் அத்துமீறி நுழைந்து மது அருந்தி, மாமிசம் சாப்பிட்டு வருகின்றனர்.

    இதைப்பார்த்து இங்கு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுளித்து செல்கின்றனர். இதனால் வெளி நாட்டவர் மத்தியில் காந்தியின் பெயர், புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. மதுரை உலக தமிழ் சங்கம் 1986-ந் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 2016-ந் ஆண்டு திறக்கப்பட்டது. அதில் மாணவ- மாணவிகள் படித்து தெளிவுறும் வகையில் 1,330 திருக்குறள்களும், அதன் விளக்கவுரைகளும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று அவை கருவேல மரங்களால் சூழ்ந்து மறைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகளின் எழுத்தும் அழிந்து பொலி விழந்து காணப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    புகார் மனுவை படித்த கலெக்டர் அனீஷ்சேகர் உடனடியாக மனுவை மேல் நடவடிக்கைக்காக மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர், மற்றும் தமிழ் வளர்ச்சி துறைக்கு அனுப்பி வைத்து உத்தரவிட்டார்.

    ×