search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WINE EXTRACTION CEREMONY"

    • நாடியம்மன் கோவில் மது எடுப்பு விழா நடைபெற்றது
    • தென்னம்பாளைகளை சுமந்தவாறு பெண்கள் ஊர்வலம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஸ்ரீ நாடியம்மன் கோவில் ஆடி திருவிழா முன்னிட்டு மது எடுப்பு திருவிழா நேற்று நடைபெற்றது. ஆலங்குடியில் உள்ள நாடியம்மனுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மதுஎடுப்பு திருவிழா நடைபெறும். அதன் படி இந்த ஆண்டிற்கான விழாவிற்கு ஆனி மாதம் கடைசி செவ்வாய்யன்று அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது.

    அன்று முதல் நாள்தோறும் லட்சார்ச்சனை நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு முளைப்பாரி திருவிழா நடைபெற்றது அதனை தொடர்ந்து மண்டகப்படியும் சிற ப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மது எடுப்பு திருவிழா நடைபெற்றது. விழாவில் ஆலங்குடி குற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள், அலங்கரிக்கப்பட்ட குடங்களில் தென்னம்பாளைகளை சுமந்தவாறு வாணவேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். தொடர்ந்து கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    • குப்பக்குடி, பாத்தம்பட்டி, மேலக்கோட்டை கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் குடங்களில் தென்னம்பாலையை வைத்து அலங்காரம் செய்து ஊர்வலமாக எடுத்து கோவிலுக்கு கொண்டு வந்து வைத்து வழிபட்டனர்
    • மது எடுப்புத் திருவிழா மாலை வேளைகளில் நடைபெறு வது வழக்கம். ஆனால் செல்லியம்மன் கோவில் மது எடுப்பு மட்டும் காலை பொழுதில் நடத்தப்படுவது கூடுதல் சிறப்பாகும்.

    புதுக்கோட்டை :

    நல்ல மழைப்பொழிவு, விவசாயம் செழித்தல் மற்றும் ஊர் மக்களின் நலன் வேண்டி ஆடி மாதத்தில் மது எடுப்புத் திருவிழா நடைபெறுவது வழக்கம்

    ஆலங்குடி அருகே செல்லியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா நடைபெற்றது. இதில் குப்பக்குடி, பாத்தம்பட்டி, மேலக்கோட்டை கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் குடங்களில் தென்னம்பாலையை வைத்து அலங்காரம் செய்து ஊர்வலமாக எடுத்து கோவிலுக்கு கொண்டு வந்து வைத்து வழிபட்டனர்.

    மேலும் மது எடுப்புத் திருவிழா மாலை வேளைகளில் நடைபெறு வது வழக்கம். ஆனால் செல்லியம்மன் கோவில் மது எடுப்பு மட்டும் காலை பொழுதில் நடத்தப்படுவது கூடுதல் சிறப்பாகும்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×