என் மலர்
உள்ளூர் செய்திகள்

செல்லியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா
- குப்பக்குடி, பாத்தம்பட்டி, மேலக்கோட்டை கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் குடங்களில் தென்னம்பாலையை வைத்து அலங்காரம் செய்து ஊர்வலமாக எடுத்து கோவிலுக்கு கொண்டு வந்து வைத்து வழிபட்டனர்
- மது எடுப்புத் திருவிழா மாலை வேளைகளில் நடைபெறு வது வழக்கம். ஆனால் செல்லியம்மன் கோவில் மது எடுப்பு மட்டும் காலை பொழுதில் நடத்தப்படுவது கூடுதல் சிறப்பாகும்.
புதுக்கோட்டை :
நல்ல மழைப்பொழிவு, விவசாயம் செழித்தல் மற்றும் ஊர் மக்களின் நலன் வேண்டி ஆடி மாதத்தில் மது எடுப்புத் திருவிழா நடைபெறுவது வழக்கம்
ஆலங்குடி அருகே செல்லியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா நடைபெற்றது. இதில் குப்பக்குடி, பாத்தம்பட்டி, மேலக்கோட்டை கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் குடங்களில் தென்னம்பாலையை வைத்து அலங்காரம் செய்து ஊர்வலமாக எடுத்து கோவிலுக்கு கொண்டு வந்து வைத்து வழிபட்டனர்.
மேலும் மது எடுப்புத் திருவிழா மாலை வேளைகளில் நடைபெறு வது வழக்கம். ஆனால் செல்லியம்மன் கோவில் மது எடுப்பு மட்டும் காலை பொழுதில் நடத்தப்படுவது கூடுதல் சிறப்பாகும்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story