search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "will be done for the"

    • நாளை முதல் முறை வைத்து தண்ணீர் திறந்து விடுவதற்கான அட்டவணையை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
    • ஒரு சில விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாக்கால் பாசனத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம்15-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 3,500 ஏக்கர் நில ங்கள் பயன்பெற்று வருகி ன்றன. தண்ணீர் திறக்கப்ப ட்டு 54 நாட்கள் கடந்த நிலை யில் நாற்று நடவு மற்றும் நாற்று விடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே பவானி சாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யாததால் அணைக்கான நீர் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

    அணையில் 11 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ள நிலையில் தற்போதைய தண்ணீர் இருப்பினை கொண்டு கீழ்பவானி பாசன சேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது.

    எனவே நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் தற்போது அணையில் உள்ள தண்ணீ ரின் இருப்பை வைத்து அனைத்து விவசாயிகளுக்கும் தண்ணீர் கிடைக்கின்ற வகையில் முறை வைத்து தண்ணீர் திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் முறை வைத்து தண்ணீர் திறந்து விட ஒரு சில விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதும் வேறு வழியின்றி இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் நாளை (வியாழக்கிழமை) முதல் முறை வைத்து தண்ணீர் திறந்து விடுவதற்கான அட்ட வணையை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது. மேலும் முறை வைத்து தண்ணீர் விநியோகக்க வசதியாக 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    கோபி கால்வாய் உபகோட்டம், ஊஞ்சலூர் பகிர்மான கால்வாய், சென்ன சமுத்திரம் பகிர்மான கால்வாய் என மூன்று பிரிவுகளாக பிரிக்க ப்பட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×