search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Will additional Aadhaar centers"

    • 3 இடங்களில் புதியதாக ஆதார் அட்டை விண்ணப்பிக்கும் மையங்கள் செயல்பட்டு வந்தன.
    • பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் செயல்பட்டு வந்த மையத்தை மூடி விட்டா ர்கள்.

    பெருந்துறை:

    பெருந்துறை தாசில்தார் அலுவலகம், பெருந்துறை தலைமை தபால் அலுவலகம் மற்றும் பி.எஸ்.என்.எல். அலுவலகம் ஆகிய 3 இடங்களில் புதியதாக ஆதார் அட்டை விண்ண ப்பிக்கும் மையங்கள் செயல்பட்டு வந்தன.

    இந்த நிலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் செயல்பட்டு வந்த மையத்தை மூடி விட்டா ர்கள்.

    தற்போது பெருந்துறை யில் 2 இடங்களில் அதாவது பெருந்துறை தாசில்தார் அலுவலகம், பெருந்துறை தலைமை தபால் அலு வலகம் ஆகிய இடங்களில் மட்டுமே புதியதாக ஆதார் அட்டைக்கு விண்ண ப்பிக்கும் மையங்கள் செயல்படு கிறது.

    பெருந்து றை பகுதியில் நிரந்தரமாக வசிக்கும் மக்கள் மற்றும் புலன் பெயர்ந்த தொழிலா ளர்கள் ஆதார் அட்டைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விண்ண ப்பித்து வருகின்றனர்.

    வயதான வர்களின் கைரேகை சரியாக விழுவ தில்லை. அதனால் ஆதார் மையத்தை அனுகி கை ரேகை பதிவாகவில்லை என்று சான்றிதழ் பெறுவ தற்கு அனுகி வருகின்றனர்.

    இதனால் ஆதார் மையத்தில் எப்போது கூட்டம் அதிகமாக காணப்ப டுகிறது. வயதானவர்கள் நீண்ட நேரம் காத்து இருக்க வேண்டியுள்ளது.

    சிலர் பேர் வரிசையில் நின்று நேரம் முடிந்து விட்டால் திரும்பி சென்று மறுமுறை வரவே ண்டியுள்ளது. தொழிலாளர்கள் விடுமுறை போட்டு விட்டு வந்து காத்து இருந்தா லும் சில சமயம் வந்த வேலை முடிவதில்லை.

    இவைகளை கவனத்தில் கொண்டு அரசு பெருந்துறை யில் கூடுதலாக ஒன்றோ அல்லது 2 ஆதார் அட்டை க்கும் விண்ண ப்பிக்கும் மையத்தை திறக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    ×