search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife complains to police"

    பெரியபாளையம் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட வாலிபர் மாயமான சம்பவம் குறித்து அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி, எஸ்.பி.கோவில் தெரு, இருளர் காலனியில் வசித்து வந்தவர் வினோத் (வயது 23). வேன் டிரைவர். இவரது மனைவி சங்கீதா.

    இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில், கடந்த 16-ந் தேதி இரவு வினோத்துக்கு செல்போனில் அழைப்பு வந்தது. இதுபற்றி அவர் மனைவி சங்கீதாவிடம் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டைவிட்டு சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் வினோத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது பற்றி சங்கீதா ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தொழில் போட்டியில் வினோத்தை யாரேனும் கடத்தினார்களா? அல்லது பெண் தகராறு காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
    ×