search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "were confiscated"

    • லாரி மற்றும் ஒரு மினி லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.
    • ஆவணங்க ளும் இல்லாமல் மண்ணை நிரப்பி கொண்டு வந்தது தெரிய வந்தது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்த பனையம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய பரிசாபாளையம் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்துவதாக தனி பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் பெரியபரசாபாளையம் அண்ணமார் கோவில் அருகே அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் வந்து கொண்டி ருந்த ஒரு டிப்பர் லாரி மற்றும் ஒரு மினி லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்து விசாரணை நடத்தி னர்.

    இதில் டிப்பர் லாரியை ஓட்டி வந்தது குரும்பபாளை யம் பகுதியை சேர்ந்த குருசாமி (32) என்பதும், மற்றொரு வாகனத்தை ஓட்டி வந்தது பவானிசாகர் இரங்காட்டூர் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (48) என்பதும் தெரியவந்தது.

    மேலும் அந்த வாகனங்க ளில் மண் எடுத்து செல்வ தற்கு எந்தவித அனுமதி மற்றும் ஆவணங்க ளும் இல்லாமல் டிப்பர் லாரி மற்றும் மற்றொரு வாகனத்தில் மண்ணை நிரப்பி கொண்டு வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த 2 வாகனங்களையும் போலீசார் பிடித்து பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்து க்கு கொண்டு சென்றனர்.

    மேலும் அரசு அனுமதி இன்றி மண் எடுத்து சென்றது குறித்து இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப்-இன்ஸ்பெக்டர் ரபீ மற்றும் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தில் ரகசிய அறை இருந்தது.
    • பிடிபட்ட 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு, அக். 21-

    ஈரோடு கொல்லம் பாளையம்-சோலார் பிரிவு அருகே இன்று காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சரக்கு வாகனம் ஒன்று வந்தது. அந்த வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர்.

    அந்த வாகனத்தில் 4 பேர் இருந்தனர். அவர்களை விசாரித்த போது அவர்கள் பாண்டிச்சேரியை சேர்ந்த சத்யராஜ், விக்னேஷ், உதயகுமார், செல்வம் என தெரிய வந்தது.

    சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தில் ரகசிய அறை இருந்தது. அதை திறந்து பார்த்தபோது 42 பெட்டிகளில் 2,016 மது பாட்டில்கள் கடத்திக்கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து மதுவிலக்கு போலீசார் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×