search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Watermelon Sale"

    • ஏப்ரல், மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.
    • சீசன் தொடங்கும் முன்பே காங்கயத்தில் தர்பூசணி பழங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதற்கு அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும் பல்வேறு வேலைகளுக்காக பகல் நேரங்களில் வெளியே வரும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். வழக்கமாக ஏப்ரல், மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால் நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்திலேயே வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது.

    இந்த சூழ்நிலையில் வெப்பத்தை தணித்துக்கொள்ள தண்ணீரையும், நிழல் தரும் மரங்களையும் தேடிச்செல்ல வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நீர்ச்சத்துக்கள் நிறைந்துள்ள தர்பூசணி பழ கடைகளை நோக்கி பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். தற்போது தர்பூசணி விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அதிக நீர்ச்சத்துள்ள தர்பூசணி பழத்தை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். பொதுவாக கோடைகால சீசன் தொடங்கும் போது தர்பூசணி பழங்கள் அதிக அளவு விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது சீசன் தொடங்கும் முன்பே காங்கயத்தில் தர்பூசணி பழங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

    • நீர்ப்பழம் என்கின்ற தர்பூசணி தாகத்தை தணிப்பதில் முக்கிய இடம் வகிக்கிறது.
    • அதிக மழையால் தர்பூசணி விளைச்சல் குறைந்து போயுள்ளது.

    பல்லடம் :

    கோடை காலத்தை முன்னிட்டு வெப்பத்தைத் தணிக்க குளிர்பானம் மற்றும் தர்பூசணி,வெள்ளரி,பழரசம் போன்றவற்றை மக்கள் உட் கொள்வார்கள். இதில் நீர்ப்பழம் என்கின்ற தர்பூசணி தாகத்தை தணிப்பதில் முக்கிய இடம் வகிக்கிறது. அந்த வகையில் பல்லடம் பகுதியில் தற்போது தர்பூசணி விற்பனை சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

    இது குறித்து பல்லடத்தைச் சேர்ந்த தர்பூசணி வியாபாரி ஒருவர் கூறியதாவது:- திண்டிவனம் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் விளைந்த தர்பூசணியை விற்பனைக்கு கொண்டு வருகிறோம்.

    அதிக மழையால் தர்பூசணி விளைச்சல் குறைந்து போயுள்ளது. இதனால் தர்பூசணி விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. சென்ற வருடம் கிலோ 15 ரூபாய்க்கு விற்ற தர்பூசணி தற்போது கிலோ 20 முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இருந்த போதிலும் மக்கள் தர்பூசணியை ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×