search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுட்டெரிக்கும் வெயிலால் சூடுபிடிக்கும் தர்பூசணி விற்பனை
    X

    சுட்டெரிக்கும் வெயிலால் சூடுபிடிக்கும் தர்பூசணி விற்பனை

    • ஏப்ரல், மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.
    • சீசன் தொடங்கும் முன்பே காங்கயத்தில் தர்பூசணி பழங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதற்கு அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும் பல்வேறு வேலைகளுக்காக பகல் நேரங்களில் வெளியே வரும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். வழக்கமாக ஏப்ரல், மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால் நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்திலேயே வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது.

    இந்த சூழ்நிலையில் வெப்பத்தை தணித்துக்கொள்ள தண்ணீரையும், நிழல் தரும் மரங்களையும் தேடிச்செல்ல வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நீர்ச்சத்துக்கள் நிறைந்துள்ள தர்பூசணி பழ கடைகளை நோக்கி பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். தற்போது தர்பூசணி விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அதிக நீர்ச்சத்துள்ள தர்பூசணி பழத்தை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். பொதுவாக கோடைகால சீசன் தொடங்கும் போது தர்பூசணி பழங்கள் அதிக அளவு விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது சீசன் தொடங்கும் முன்பே காங்கயத்தில் தர்பூசணி பழங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

    Next Story
    ×